Understanding knowledge

  • மதுவிலிருந்து விடுதலை…

    மது, புகையிலை, போதை, தகாத உறவு போன்ற பழக்கங்களிலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும், ஆனந்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். இந்த கட்டுரையை உணர்வும், அறிவும் என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதி பரிசோதித்து விட்டேன் இந்த கட்டுரையை படித்துவிட்டு கெட்ட பழக்கங்களில் இருந்து பலர் மீண்டு இருக்கின்றார்கள்,எனவே அனைவரும் இதை படித்து பயன்பெறுங்கள். நம்முடைய சிந்தனையும், செயலும் நாம் பெற்றிருக்கும் உணர்வையும், அறிவையும்…

  • ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 1

    செவிடன் காதில் ஊதிய சங்கை போல், அறிவைப் பற்றியும், ஆறாவது அறிவை பற்றியும் நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரையால் இந்த சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை, உணர்விலிருந்து விடுபட்டு சிந்திக்கும் ஆற்றலே மனிதர்களிடம் இல்லை. இருப்பினும் புதிய யுத்தியில் புதிய முயற்சியாக இந்த கட்டுரையை எழுதுகின்றேன். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவுகள் இறந்த காலத்தின் தொடர்பு இல்லாமல் சுயமாக மனிதர்களால் சிந்திக்கவே முடியாது,அறிவால் யாரும் உயர்ந்தவரும் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல.ஆண்களின் அறிவும், பெண்களின் அறிவும்…

  • தோல்வியும், துன்பமும் நிரந்தரம் அல்ல!

    தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காகவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன். மருத்துவ படிப்புக்கு தேர்வாகவில்லை, காதல் தோல்வி என்று தோல்வியின் விரக்த்தியில் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை கேள்விபட்டு அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன்.இந்த கட்டுரையை படித்துவிட்டு குறைந்தது ஒரு இளைஞர் தன் முடிவை மாற்றிக் கொண்டால் அந்த புண்ணியம் அவருக்கு பகிர்ந்த நபருக்கே போய் சேரும். வெற்றியும்,தோல்வியும் இரண்டு பாதைகள், வெற்றியின் பாதையில் சென்று துன்பத்தை சென்றடைந்தவர்களும் உண்டு,தோல்வியின் பாதையில் சென்று இன்பத்தை…

  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…

    அனைவரும் சமம் என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், மனிதர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தோடும் வாழ ஒவ்வொருவரின் உரிமையையும் துல்லியமாக வரையறுப்பது மனிதனின் நீதியாக இருப்பது போல்.விதி என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும் நம்முடைய முயற்சியும், உழைப்பும் தான் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.இதை புரிந்து கொள்ளாமல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளை மேற்கோள்காட்டி அனைவரும் சமம் என்று தனிமனித உரிமைகளுக்குள் அத்து மீறி ஒருவர் சென்றாலோ, அல்லது விதி என்பது இயற்கையின் நீதி…

  • சாதி

    திறமையான திருடனை இந்த சமுதாயம் திருடனாக ஏற்றுக் கொள்ளாது. திறமை இல்லாமல் திருடி மாட்டிகொண்டவனை தான் திருடனாக ஏற்றுக்கொள்ளும். அதுபோல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், மக்களிடம் சாதி உணர்வை தூண்டியும், சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லியும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் தலைவர்களைத் தான் ஆளுமை மிக்க தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்,நேர்மையான, ஒழுக்கமான, அனைவரையும் சமமாக பார்க்கும் திறமையான அரசியல் தலைவர்களை மக்கள் அரசியல் தலைவராகவே ஏற்க மாட்டார்கள்.இது மக்களின் தவறல்ல, இது இயற்கையின் நீதி.…

  • வாதம் செய்வது சரியா?

    வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும்.வாதம் எங்கு செய்ய வேண்டும், வாதம் இல்லாமல் கருத்தை மட்டும் எங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டதால் வாதத்தைபற்றி ஆய்வு செய்து அதற்கான அளவுகோலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தேன்,அதை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற…

  • ஒரே இடத்தில் தேங்கி விடாதே

    ஒவ்வொரு உணர்வுகளும் தனித்தனி உலகம். ஒரு உணர்வில் வாழும் பொழுது மற்றொரு உணர்வு உலகத்தில் நாம் வாழ முடியாது. ஒரு மனிதன் பல உணர்வு உலகில் மாறி மாறி வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை. அன்பு, பாசம், குடும்பம், உணவு, விளையாட்டு, போட்டி, பணம், படிப்பு,புகழ், பதவி, காமம், நட்பு, என்று பல உணர்வுகள் மனிதனுக்கு இன்பத்தை கொடுத்தாலும், ஒரே ஒரு உணர்வு உலகத்தில் தன் வாழ்க்கையை தொலைத்து விடுவதை நன்மையாக இருந்தால் சாதனையாக பார்க்கின்றார்கள், கெடுதலாக இருந்தால்…

  • வெற்றியும், தோல்வியும்…

    வெற்றியும், தோல்வியும் இரண்டு மார்க்கங்கள். எந்த மார்க்கமாக நாம் பயணம் செய்தால் நன்மைகள் நடக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே வாழ்க்கையில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் சமமாக நினைத்து ஆணவம் இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே இன்பமாக வாழ முடியும்.

  • துறவு

    இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு தான் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிய அறிவை தேடுகின்றோம், நான் தேடியதில் புதிதாக எனக்கு கிடைத்த அறிவை அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பதிவிடுகின்றேன். துறவு என்றால் என்ன?துறவு நமக்கு இன்பத்தை கொடுக்குமா? என்பதுதான் நம்முடைய கேள்வி. துறவு என்ற வார்த்தைக்கு “விடுதல் “மற்றும் “வாய்ப்பான நிலை” என்று பொருள். துறவு என்பதற்கு அனைத்தையும் துறக்க வேண்டும் என்று பொருள் கொள்வது தவறு. துறவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அடுத்த…

  • AI எனும் செயற்கை மூளை

    artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை. அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “குமார் விதிகள் “என்ற ஆய்வு புத்தகம் எழுதி இருக்கின்றேன். https://drive.google.com/file/d/1uO8Dul1V859ifE8qT_s0DNNBQDaU3X_4/view?usp=sharing ”குமார் விதிகள் “என்ற என்னுடைய புத்தகத்தை படித்து புரிந்து கொண்ட பிறகு இந்த கட்டுரையை படித்தால் தான் AI யின் பலமும், பலவீனமும் வாசகர்களுக்கு தெரிய வரும். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவு, ஒரு…