அறிவுரை
-
நமக்கு பிடித்ததை நாம் அடைவது தான் வெற்றி
வெற்றிக்கு முதல் படி முயற்சி !முயற்சிக்கு முதல் படி நம்பிக்கை !நம்பிக்கைக்கு முதல் படி (ஆசை )தேவைகள் !தேவைகளுக்கு முதல் படி உணர்வு! வெற்றி என்பது சமுதாயத்துக்கு பிடித்ததை நாம் அடைவதில் இல்லை, நமக்கு பிடித்ததை நாம் அடைவதில் தான் உள்ளது.
-
உணர்வின் கடிவாளம் அறிவு
ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்ற வாழ்க்கையில்தான் உள்ளது. ஒருவனுடைய அறிவின் வெளிப்பாடு அவன் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் தான் வெளிப்படுகின்றது. இளைஞர்களை பார்த்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்வது மிக எளியது, ஆனால் இதுவரை யாரும் அறிவால் உணர்வுகளை எப்படி ஆளுமை செய்து ஒழுக்கமாக வாழ்வது…
-
என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும்
ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விட்டதால், தன்னம்பிக்கையை இழந்து மிகவும் சோகத்தில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த அப்பாவின் நண்பர் எனக்கு ஆறுதலாக நீ பெரிய அறிவாளி, உன்னிடம் திறமைகள் அதிகம் இருக்கு,“வெற்றி பெறுபவர்கள் அனைவரும் அறிவாளியும் இல்லை,…
-
மரணம்
மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இருக்கும்போதே மரணத்தை உணர முடியும். நம்முடைய அறிவின் முதிர்ச்சியால் நான் நான்அல்ல என்ற ஞான நிலையை நாம் அடையும் போது தற்காலிகமாக ஒரு சில கணம் நான் என்ற உணர்வில் இருந்து முழுவதுமாக விடை பெற்று விடுவோம் இந்த நிலை மரணத்திற்குச் சமமானது.…
-
புரிந்துகொள்ள முடியாத வாசகன் நம்புவான்
புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக. எழுத்தாளர்கள் பலர் பிரபலமானவர் பெயரைச் சொல்லி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதன் நோக்கம் உன்னை சிந்திக்க விடாமல் நம்ப வைப்பதற்கு என்பதை வாசகன் புரிந்துகொள்ள வேண்டும். விதி உண்மை என்று ஒரு எழுத்தாளர் சொல்ல நினைத்தால் எப்படி என்று விளக்க வேண்டுமே தவிர, மாறாக பெரிய மனிதர்களின் பெயரை…
-
ஏழாவது அறிவு
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை… ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம்,அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே…
-
பேரறிவாளனின் தூக்குத்தண்டனை அறிவற்ற செயல்
பேரறிவாளனின் தூக்குத்தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று நான் எழுதியபோது தமிழ் உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன், சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நான் எதிர்த்த போது சாதி உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன், இன்று ஹாசினியின் கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை கொடுத்ததை அறிவற்ற செயல் என்று எதிர்க்கின்றேன்.இதையும் புரிந்து கொள்ளாமல் என்னை முட்டாள் என்று என்னும் வாசகர்களே நான் பெற்ற புதிய அறிவை நீங்களும் பெற முயற்சி செய்யுங்கள். ”உன் செயலுக்கு நீ காரணம்…
-
பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள்
ஊடகங்களும், பெரிய மனிதர்களும், பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு செய்தால் தவறில்லை,ஆனால்மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் தவறு,உபதேசம் எப்போதும் ஏழை மக்களுக்குதான்.கடமையை விட்டுக்கொடுத்தால் துரோகம்.உரிமையை விட்டுக்கொடுத்தால் தியாகம்.கொள்கை இல்லா தலைவர்கள் இருப்பதால்தான்,பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள்
-
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்!
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்!ஒருவர் அறிவை வேறுஒருவர் அறிவால் மதிப்பிட முடியாது!+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களே உங்கள் அறிவை இந்த சமுதாயம் மதிப்பிட முடியவில்லை என்பதையே இந்த தேர்வு முறை காட்டுகின்றது. நீ யாரைவிடவும் அறிவால் குறைந்தவன் அல்ல! தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம், வாழ்த்துக்கள்!
