Politics

  • வெறுப்பு கலவரத்தின் பிறப்பிடம்

    கலவரங்களை மக்கள் செய்தாலும் அதை உருவாக்குபவர்கள் ஆட்சி செய்பவர்களும், ஆட்சிக்கு வரநினைப்பவர்களும்தான். கலவரம் மனித சமுதாயத்திற்கு புதியது அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதவி வெறி பிடித்தவர்கள் மக்களைப் பிரித்தாளவேண்டும் என்பதற்காகவே சாதி, மதம், மொழி, இனம், பொருளாதாரம் ஆகியவற்றால் மக்களிடையே வேற்றுமை வெறுப்பை ஏற்படுத்தி கலவரங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்பது ஒருவித குறுக்குவழி, இந்த குறுக்கு வழியை பிஜேபி கட்சி பயன்படுத்தி பிரிவினையின் மூலம் கலவரங்களை ஏற்படுத்தி தான் ஆட்சிக்கு வந்தது. பிஜேபி…

  • வெற்றிடம்

    புத்தர், காந்தி, பெரியார், போன்ற பல மாமனிதர்களின் வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்து பதவி சுகத்தை அனுபவித்த அரசியல் தலைவர் மறைந்த பிறகு, அந்த இடத்தை நிரப்ப துடிக்கும் பதவி வெறியர்களால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும். வெற்றிடத்தை நிரப்ப நினைப்பவர்கள் நிச்சயம் அவர்களை போல் தான் இவர்களும் இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களைப் போல் தான் இருப்பார்கள்.மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால்,…

  • இந்தி மொழியை கற்கலாமா ?

    மத்திய அரசின் நிர்ப்பந்தம் இல்லாமல் விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழியை கற்கலாமா ? அறிவை பற்றி நான் செய்த ஆய்வில் கிடைத்த விடை —நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோம், எதை உணர்கின்றோமோ, அது நம்மை, நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளஆரம்பித்துவிடும் என்பதே,இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. நாம் பெறுகின்ற அறிவு அனைத்தும் நமக்கு நன்மையை செய்யாது. நாம் பெற்ற பல அழிவுகள் நமக்கு சூனியம்மாகவே அமைந்துவிடுகின்றன.அதனடிப்படையில் இந்தியை தாய்மொழியாக இல்லாதவர்கள் இந்தியை விரும்பி கற்றுக்கொண்டால் அது…

  • உளுத்துப்போன ஊடகத்தூன்

    மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று எல்லோரும் சொல்லும் பொழுது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அசிங்கம். அது போல் தான் இன்றைய ஊடகங்களும், மக்கள் எவ்வழியோ அவ்வழியே அவர்களுடையதும். மக்கள் நஞ்சை விரும்பினாலும் அதையும் கொடுக்க தயங்க மாட்டார்கள், காரணம் ஊடகங்களுக்கு இது வியாபாரம். கர்நாடகாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம் எல் ஏக்கள் இந்த சட்டமன்ற காலம் முடியும் வரையில் தேர்தலில் போட்டியிட தடை விதித்து சபாநாயகர் உத்தரவு இட்டதை தவறு, இவருக்கு இந்த…

  • வாழ்க தமிழ் ! சரியான முழக்கமா ?

    தமிழ் வாழ்க என்று சொல்லும் அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இதுவரை அதற்கான முயற்சியை செய்து இருக்கின்றார்களா என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். நம்முடைய இலக்கு தமிழ் மொழியும், இந்தி மொழியைப்போல் தேசிய அலுவல் மொழிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான். இந்த அங்கீகாரம் நம் மொழிக்கு கிடைத்தால் மட்டுமே நம் மொழி நமக்கு பயனுள்ள மொழியாக இருக்கும். தற்போதுள்ள மொழிக் கொள்கையின் படி, இந்தியைத் தவிர அனைத்து மாநில மொழிகளும் பயனில்லாத மொழிகள்…

  • I am anti-Hindi fanatic

    இந்தியாவில் பல மாநில மொழிகள் இருக்க, இந்தியை மட்டும் தேசிய அலுவல் மொழியாக வட இந்தியர்கள் அறிவித்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது. இது மற்ற மாநில மொழிகளுக்கும்,மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை. எதிரியே தீர்மானிக்கிறான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று, சாதியாலும், மதத்தாலும், மக்களை பிரித்து அவர்களை anti indian என்று சொல்லி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை கெடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி அரசு இன்று மொழியால் மாநிலங்களை பிரித்து, தேச ஒற்றுமையை…

  • மீண்டும் ஒரு கோமாளி செயல்

    அன்னநடையை கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட வாத்தைப்போல், அன்ன நடையையும் கற்றுக்கொள்ளமுடியாமல், சொந்த நடையையும் மறந்து தத்தி தத்தி வாத்து நடப்பது போல் அனைத்து மாநில மக்களும் தங்கள் தாய் மொழியையும் இழந்து புது மொழியையும் கற்றுக் கொள்ள முடியாமல், எந்த மொழியையும் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாமல், தவிக்கின்ற நிலைதான் வரும். பலமொழிகளை கற்றிருந்தாலும் தாய்மொழியாலேயே சிந்திக்கின்றனர் என்றும், பல மொழிகளைக் கற்கும் மாணவர்கள், மொழி ஆளுமைக்கே கவனம் முழுவதையும் செலுத்துவதால் சிந்திக்கும் திறன் (creativity )குறைக்கின்றது என்று…

  • மும்மொழி கொள்கையை எதிர்ப்பது ஆரோக்கியமான செயலா ?

    உடல்வலிமை, அறிவு, பொருள், போன்ற அனைத்து செல்வத்தையும் பெற்றுஇருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியத்தை செயலின் மூலம் ஒருவன் வெளிப்படுத்த முடியும். ஒருவனுடைய செயலே அவனுடைய ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். ஆரோக்கியம் இல்லாதவர்களால் போராடவோ, புரட்சி செய்யவோ,முடியாது என்பது இயல்பு. நம்மில் பல நண்பர்கள் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றார்கள் என்றால் அதன் பொருள் அவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதின் வெளிப்பாடே. எனவே அவர்கள் அவர்களின் உடலையும், அறிவையும், சுய பரிசோதனை செய்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இந்தியா முழுவதற்கும் ஒரே…

  • தாய்மொழி நம் பிறப்புரிமை

    இந்தியா பல நாடுகளின் கூட்டமைப்பு,ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தாய்மொழிகள் உள்ளன, அதனால் தான் இந்தியாவுக்கு என்று எந்த மொழியும் தேசிய மொழியாக இல்லை. இந்தி தேசிய மொழிஅல்ல.இந்தியா ஒரு கூட்டமைப்பு நாடு என்பதால், எந்த ஒரு மாநில மொழியும், கலாச்சாரமும், மற்றொரு மாநிலத்தி ன்மீது திணிக்கக் கூடாது என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆன அடிப்படை உரிமை.மீறினால் ஐநா தலையிடுவதற்கு உரிமை உள்ளது இதைப் பொருட்படுத்தாத…

  • அரசியல் விழிப்புணர்வு

    யார் நாட்டை ஆண்டால் எனக்கென்ன ? இன்று நான் உழைத்தால்தான் சாப்பாடு என்று அலுப்போடு சொல்லும் அடிதட்டு உழைப்பாளி முதல், அரசியலை முழுமையாக கரைத்து குடித்து விட்டு இந்த நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் வரை, அனைவருக்குமான விழிப்புணர்வு கட்டுரை இது. நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காக இந்த கட்டுரையை நான் எழுத வேண்டியது என்னுடைய கடமையாக எண்ணி எழுதி உள்ளேன். எனவே வாசகர்கள் படித்ததும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், காரணம் நாம் நல்லவராக இருப்பதை காட்டிலும்…