Politics
-
தேர்தல் இடஒதுக்கீட்டால் மக்களிடம் சமத்துவம் மலருமா?
தேர்தலில் இடஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை, கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது சமுதாய நீதி, தனிமனித உரிமை என்ற என்னுடைய ஆய்வுக்கட்டுரையை பல ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் அது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அதற்கு காரணம் தனக்கு எது நல்லதோ அது தான் சரியானது என்ற சிந்தனை நம்மில் பலரிடம் இருப்பதும், புதிய கருத்தை வெளிப்படுத்த அஞ்சுவதுவுமே,எல்லோரையும் போல் மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று சொல்லி விட்டால் பிரச்சனை இல்லை. கடவுள் தெரியவில்லை என்று சொல்லி விட்டால்…
-
தேர்தல் முறை மாறவேண்டும்
தேர்தல் முறை மாறவேண்டும்!! இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 20% வாக்கை பெற்று மொத்த வாக்கில் அதிகம் பெற்ற கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று சட்டம் இயற்றப்பட்டால் தான், ஒவ்வொரு மாநில கட்சிகளின் ஆதரவும் மத்திய அரசுக்கு தேவைப்படும், அப்போது வட இந்தியர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என்ற நிலை மாறி தென் மாநிலத்தவரும் இந்தியர் தான் என்ற நிலை உருவாகும். ஓவ்வொரு மாநில மொழிக்கும் தேசிய மொழி அங்கீகாரம் கிடைக்கும்.அனைத்து…
-
இந்தி தெரியாது போடா…
”இந்தி தெரியாது போடா “ “நான் தமிழ் பேசும் இந்தியன் “ என்ற வாசகத்தின் பொருள் இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் மொழி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற இருமொழிக் கொள்கையை வலிவுறுத்துகின்ற மொழிச் சுதந்திரப் போராட்டமே ஆகும். இதைப் புரிந்து கொள்ளாமல் போராடுபவர்களுக்கு இந்தி தெரிந்திருந்தால் அவர்கள் தாய் மொழிக்காக போராட தகுதி இல்லாதவர்கள் என்று கேலி செய்வது அறியாமையின் வெளிப்பாடே மற்றும் தாய்மொழி உணர்வை அரசியலுக்காக விற்கும் செயலே இது.
-
மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை
மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை, இவற்றில் ஒன்று இந்த மந்தையை வழிநடத்துவது தான் ஜனநாயகம். மந்தையின் தலைவன் (அரசியல்வாதி )ஆட்டு மந்தையின் விருப்பப்படி ஆட்சி செய்தால் தான் அவன் தலைவனாக இருக்க முடியும். எது நன்மை, எது தீமை என்று அறிந்து செயல்பட்டால் அவன் பதவி பறிபோய்விடும், எனவே ஜனநாயக நாட்டில் ஆள்பவன் அறிவாளியாக இருந்து பயனில்லை, மக்களின் விருப்பத்தை செயல்படுத்துபவனாக இருந்தாலே போதும். மக்களையும், அரசியல் தலைவர்களையும் நன்மை, தீமை அறிந்து வழிநடத்த அரசியல் சார்பில்லாத சமூக…
-
இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும்
நம் கல்விமுறை அறிவை கொடுப்பதற்காக மட்டும் இருந்தால் இந்தி மட்டுமல்ல அனைத்து மாநில மொழியையும் படிக்கலாம் தவறு இல்லை, ஆனால் நம் கல்விமுறை ஒருவனுடைய அறிவுத்திறனையும் மதிப்பிடுவதால் இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும். நம் தாய்மொழியின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கும் இசை அமைப்பாளர் யுவனை கேலி செய்யும் தமிழர்கள் தன் கையாலேயே தன் கண்ணை குத்திக்கொள்பவர்கள். தன்னுடைய குருதி என்று அறியாமல் தன் குருதியை தானே சுவைத்து அருந்தும் அரசியல் கைக்கூலி…
-
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்
நம்பிக்கையே வாழ்க்கை, நம்பிக்கை இல்லை என்றால் போராட்டம் இல்லை, போராட்டம் இல்லை என்றால் வெற்றி இல்லை, வெற்றி இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை இந்த நாட்டை ஆள்பவர்களால் தான் மாற்ற முடியும் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு தனி மனிதனால் எப்படி முடியும் என்று நான் நினைத்து இருந்தால், “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்” என்ற புத்தகத்தை எழுதி இருக்க மாட்டேன், முடியும் என்ற நம்பிக்கையே என்னை எழுத வைத்தது எழுதிய…
-
மனிதன் மாற மாட்டான்
ராமர் படத்தை செருப்பால் அடித்தால் பத்து ரூபாய் கொடுப்பதாக சொன்னால் ஊரே ஒன்று சேர்ந்து ராமர் படத்தை செருப்பால் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,காரணம் மனிதன் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விரும்புவது இல்லை என்பது மனிதனின் இயல்பு. கல்வியும், வேலைவாய்ப்பும், சமத்துவமும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்பட்டதால் அவன் வனங்கிய தெய்வத்தை கூட எதிர்க்க தயங்க வில்லை என்பதுதான் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.…
-
பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார்?
பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார் ?கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானதா?சட்டப்படி அது குற்றமா ? கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம், அது தனிமனித உரிமை. எனவே கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.ஆனால் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுளின் படத்தை செருப்பால் அடித்து சிறுமை படுத்தினால் அது மத நம்பிக்கைக்கு எதிரான குற்றம். இதை பெரியாரும், திராவிடர் கழகத் தொண்டர்களும் 50 ஆண்டுகளுக்கு முன் செய்தார்களா என்றால்,…
-
பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்தது சரியா?
பெரியாரின் முற்போக்குச் சிந்தனையில் மாறுபட்ட கருத்துக்கள் எனக்கு இருந்தாலும், சமூகப் போராளியாக பெரியார் இருந்ததால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் உடன்படுகிறேன். ராமர் படத்தை செருப்பால் அடித்ததன் நோக்கம், இந்து கடவுளை சிறுமைப்படுத்த அல்ல, இந்து கடவுளின் பெயரால் உழைக்கும் இந்து மக்களை அடிமைப்படுத்தி இருந்த உயர் சாதி இந்துக்களுக்கு எதிரான போராட்டம். ராமர் படத்தை அன்று பெரியார் செருப்பால் அடிக்க வில்லை என்றால் நாம் இன்று கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் சமத்துவத்தை பெற்றிருக்க மாட்டோம்.…
-
தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும்
உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றது. 70 ஆண்டுகளுக்கு முன் திராவிட கழகம் வளர்ச்சி அடையும்போது படித்தவர்களும். கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் இருந்ததால்தான் தி க வின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் தற்போது பகுத்தறிவு இல்லாதவர்களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் அதிகமாக இருப்பதால்தான் திராவிட கழகம் மக்களிடம் செல்வாக்கை…
