Politics
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் ஆளுமைமிக்க முதல்வராக ஸ்டாலின் வெற்றி வாகை சூடி இருப்பதற்கு வாழ்த்துக்கள். உழைப்பும், நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே சான்று. ஜெயலலிதா அவர்கள் இறந்த உடனேயே குறுக்கு வழியில் ஸ்டாலின் முயற்சி செய்திருந்தால் நான்கு ஆண்டுகள் முதல்வர் பதவியை அனுபவித்திருக்கலாம், ஆனால் அவர் அதற்கு ஆசைப்படாமல் நேர்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக தான் பதவியேற்பேன் என்று சொன்னது அவருடைய நேர்மைக்குச்…
-
கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும்
விதி உண்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும். அப்போது சமத்துவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய நீதி உருவாகும். விதி உண்மை என்ற புதிய அறிவை மக்கள் பெறாதவரை உலகில் பிரிவினை அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
-
100 சதவிகித வாக்குப்பதிவு !
அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்வது ஜனநாயக விழிப்புணர்வா !அல்லது வாக்காளர்களை நிர்பந்திக்கும் செய்யலா! சரியான பதிலை தேர்வுசெய்யும் தேர்வு முறையில் தவறான பதிலை தேர்வு செய்தால் மதிப்பெண் குறைந்து விடும் என்பதை போல் அரசியல் பற்றிய தெளிவு இல்லாமல் ஜனநாயகத்தை பற்றிய விழிப்புணர்வும் இல்லாதவர்களை வாக்களிக்க வேண்டுமென்று நிர்ப்பந்தித்தால், அரசியல் தெரியாமல் இராமர் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற அறியாமையில் வாழ்பவர்கள் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிப்பதால்…
-
உங்கள் வாக்கு எதற்கு, உணர்வுக்கா? அறிவுக்கா?
உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உணர்வால் முடிவு செய்தீர்களா அல்லது அறிவால் முடிவு செய்தீர்களா, உணர்வின் மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் நன்மையாக தெரிவதால் சரியாகத் தோன்றும். அறிவின்மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் தவறாக மற்றவர்களுக்கு தெரிந்தாலும் வருங்காலத்தில் அதுவே நன்மையாக இருக்கும். சுதந்திரம் பெற்ற உடனே ஜனநாயகம் மலர்ந்தது, ஜனநாயகத்தால் சமூக நீதி கிடைத்தது, சமூகநீதியால் குலத்தொழில் ஒழிக்கப்பட்டது, குலத்தொழில் ஒழிக்கப்பட்டதால் அனைவரும் சமம் என்ற நீதி அனைவர் மனதிலும் நீங்கா இடம்…
-
10.5% இட ஒதுக்கீடு சமூக நீதியா? சமூக அநீதியா?
இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்கள் தங்கள் மனசாட்சியை சாட்சியாக வைத்து “இந்த கட்டுரையை படித்தவுடன் 10.5 % ஒதுக்கீட்டில் என் அறிவு சொல்லும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன் “என்றுசத்தியம் செய்துவிட்டு படிக்கவும், காரணம் தனக்கு எது நல்லதோ அதுவே சரியானது என்ற உணர்வின் அடிப்படையில் வாழ்பவர்கள் இந்த சமுதாயத்தில் 1000க்கு999பேர்.கடந்த 10 ஆண்டுகளாக பல அறிவியல் சார்ந்த புதிய நீதியை நான் எழுதி இருக்கின்றேன், ஆனால் படித்தவர்களில் ஒருவர்கூட உணர்வின் நிலையிலிருநது அறிவு நிலைக்கு மாறவில்லை என்பதே…
-
உங்களுக்கு வாக்குரிமை உள்ளதா ?
நம் நாட்டில் வாக்குரிமை உள்ளவர்கள் 20 % சதவிகிதத்தினர் மட்டும்தான், மீதமுள்ள 80 %சதவிகிதத்தினர் வாக்குரிமை இருந்தும், இல்லாதவர்களே. ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கின்றது என்று சொல்கின்றார்களே !அதன் உள் பொருள் அந்த வங்கியில் உள்ளவர்கள் அவர்களுடைய வாக்குரிமையை அடகு வைத்துள்ளார்கள் என்று பொருள்.அவர்களின் கட்சிகள் தொடர்ந்து தவறுகளை செய்தாலும், இவர்களும் தொடர்ந்து அதற்கேதான் அவர்களின் வாக்கை போடுவார்கள் என்பது உறுதி. வாக்குரிமையை இழந்து நிற்கும் கட்சி உறுப்பினர்களே, பொறுப்பாளர்களே, சிந்தியுங்கள் !உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்…
-
எது ஜனநாயகம்?
மக்களுக்கு அறிவுரை சொல்லும் ஆட்சியாளர்களும், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும், ஜனநாயகத்தை மதிக்கிறார்களா என்று முதலில் பார்ப்போம், அதன் பிறகு மக்களிடம் தனிமனித ஜனநாயக கடமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும். 1)மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, MPக்கள் ஜனநாயகத்துக்கு எதிராக இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியது ஜனநாயக படுகொலை, இந்த ஜனநாயக கொடுமையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லாத ஊடகங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று மக்களுக்கு அறிவுரை கூற தகுதியில்லாத ஊடகங்கள். 2)குற்றம் செய்த…
-
நிர்பந்திக்காதே!
உங்கள் வாக்கு யாருக்கு என்று, நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் வாக்களிக்கப் போகும் கட்சியின் பெயரை சொன்னேன். அதை கேட்ட நண்பர் நானும் அதற்கே போடட்டுமா என்று கேட்டார். நான் அதற்கு வேண்டாம் என்றேன்.நண்பருக்கு புரியவில்லை, நான் சொன்னேன், நாம் எடுத்த முடிவு நமக்கு சரியானதாக இருக்கலாம் அது மற்றவர்களுக்கும் சரியானதாக தான் இருக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதற்கு உங்களுடைய வாக்கை போடுங்கள்…
-
நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும்
ஒரு சமுதாயத்தின் அறிவு தான் அந்த சமுதாயத்தின் நீதியாக இருக்க முடியும். நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும். பெரும்பான்மை மக்களிடம் அறிவு மாற்றமில்லாமல் நீதி மாற்றம் ஏற்படாது. ஒரு நடிகையின் தற்கொலைக்கான காரணத்தை தெரிந்துகொள்ள மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கும் ஆர்வம் மாநில பொருளாதாரம், கல்வி, மொழி ஆகியவற்றின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என்பதில் இல்லை. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கடமை ஊடகங்களுக்கு தான் அதிகம் உள்ளது ஆனால் இங்கு ஊடகங்களால் அனைத்தும்…
-
அரசியல் கைக்கூலிகள்
அரசியலுக்காக சாதியாலும்,மதத்தாலும் மக்களை ஒன்று திரட்டும் ஒவ்வொருவனும் சமுதாய நல்லிணக்கத்திற்கு எதிரானவன்.பிழைக்க வழி இல்லாத அரசியல் கைக்கூலிகள், தன் பிழைப்புக்காக புதியதாக யார் கட்சி ஆரம்பித்தாலும் அங்கு ஓடி இடம் பிடிப்பது இயல்பே.
