Politics

  • ஜனநாயகம்

    ஜனநாயகம் என்பது ஜனங்களின் விருப்பப்படி ஆட்சியை அமைத்துக் கொள்வது தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே மக்களை ஆள வேண்டும் என்பதே ஜனநாயகம். மக்களின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமை 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உண்டு, இதில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர் என்ற எந்த வேறுபாடும் இல்லை. ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பது அறிவு சார்ந்த விடையம் அல்ல, உரிமை சார்ந்த விடையம். அதனால்தான் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அறிவு இல்லாத படித்தவர்களும், உயர்ந்த சாதியினரும் தன்னை…

  • சமூக நீதி என்றால் என்ன?

    சமூக நீதி என்பது சாதி அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து துறையிலும் இட ஒதுக்கீடு கொடுப்பதுதான். முன்னேறிய சாதியினருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல், அரசியல் லாபத்திற்காக பின்தங்கிய சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்வது சமூகநீதி அல்ல. சாதியால் குடும்பங்கள் கூடி வாழ்வதும் தவறில்லை, சாதி தீண்டத்தகாத வார்த்தையும் இல்லை. சாதிக்கு ஒரு நீதி தான் தவறானது, எனவே சமூக நீதியை உருவாக்கிவிட்டால் சாதியை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதியை தீண்டத்தகாத…

  • உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு சரியா?

    அறிவு இல்லாமல் அறிவை புரிந்துகொள்ள முடியாது! அனுபவம் இல்லாமல் அறிவை பெறமுடியாது! அனுபவம் இல்லாத படிப்பு அறிவை கொடுக்காது! ஆணும், பெண்ணும் அறிவாலும் உணர்வாலும் வேறுபட்டவர்கள்! ஆண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும், பெண்களால் புரிந்துகொள்ள முடியாது! பெண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும் ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது!காரணம் ஆணுடைய அறிவும், பெண்னுடைய அறிவும் வேறு வேறு! இது என்னுடைய ஆய்வின் முடிவு. இது அறிவியல் உண்மை. இதை புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் புரியவில்லை என்றால் நம்புங்கள். உள்ளாட்சி…

  • நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது

    நீதி, சட்டத்தை ஆதாரமாக வைத்திருக்கும் நம் நாட்டில், சட்டத்தை உருவாக்கக்கூடிய எம் எல் ஏ, எம் பி, யை குற்றவாளிகளாக தேர்ந்தெடுத்துவிட்டு, நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. நீதிமன்றம், நீதியை நிலைநாட்டுகின்ற இடம் அல்ல, அது சட்டத்தை செயல்படுத்தும் இடம். அங்கு நீதி கிடைக்காது. சட்டத்தை உருவாக்குகின்ற சட்டமன்றமும், நாடாளுமன்றமும் தான் நீதிமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் அங்கு நீதிபதிகள் என்பதை, மக்கள் புரிந்து கொண்டால் நேர்மையானவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்போதுதான் நீதி அனைவருக்கும்…

  • வாழ்க புரட்சிக் கவி பாரதியின் புரட்சி

    “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பதில்லையே !!“ என்று வீர முழக்கத்தை நமக்கு அறிவாக கொடுத்துச் சென்ற புரட்சிக்கவி பாரதி நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் இன்றளவும் அவருடைய புரட்சி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாலேயே! பாரதி கவிதை மட்டும் எழுதி இருந்தால் அவர் மறைந்தபொழுதிலேயே மக்கள் பாரதியை மறந்திருப்பார்கள், ஆனால் பாரதி பெண் விடுதலைக்காகவும், சாதி சமத்துவத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் களத்தில் இறங்கி சமரசமில்லாமல் புரட்சி செய்ததாலேயே…

  • ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது?

    ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது? ஆடு மீது உள்ள அக்கறையால் அல்ல !அதை கொன்று சாப்பிடுவதற்காகவே என்பதை போல், தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக இல்லாதவர்கள் தமிழர்களைப் போல் தமிழில் பேசினாலும் அவர்களில் பலர் தமிழை அழிப்பதற்காகவே இந்தி மொழிக்கு ஆதரவாக பேசுகின்றார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒரு மொழி தாய் மொழியாக இருப்பதால் அனைத்து மாநில மக்களும் மற்ற மாநில மக்களுடன்…

  • சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள்

    சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைப்பது போல் மத கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று மதசார்பு இல்லா தமிழக அரசு விரும்பினால் பலரின் பெயர்களை புதிதாக வைக்க வேண்டி இருக்குமே,எந்தப் பெயர் யாருக்கு என்று புரிந்து கொள்வதில் பெரிய குழப்பமாகிவிடுமே!இறந்தகால நிகழ்வுகளை மாற்றமுடியாது என்று பகுத்தறிவாளர்களுக்கு தெரியாதா?உள்ளதை உள்ளபடியே மாணவர்களுக்கு சொள்வதுதான் சரியான கல்வி.

  • மும்மொழி கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்?

    1) மும்மொழி கல்விக் கொள்கை மாநில மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும். இருமொழிக்கொள்கை மாநில உரிமை, இதை மீறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் கல்வி கொள்கை இருக்க வேண்டும், மீறினால் உச்ச நீதிமன்றம், அல்லது ஐ நா தலையிடுவதற்கும், மத்திய அரசை எச்சரிப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே மும்மொழி கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 2). உலக ஆய்வின் முடிவு தாய்மொழியால் படிக்கும் மாணவர்களால் மட்டுமே அறிவிலும், சிந்தனைத் திறனிலும் சிறந்து…

  • ஒன்றிய அரசு

    நொண்டியை நொண்டி என்று சொல்வதுபோல் ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதில் என்ன தவறு. நொண்டியை போல் ஒன்றிய அரசு மாநிலங்களின் தோள்களில் சவாரி செய்துகொண்டு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று சுமக்கும் மாநிலத்தையே அடிமைப்படுத்த முயற்சிக்கும் போதுதான் ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்று நினைவுபடுத்த வேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு ஏற்படுகின்றது. சுமப்பவனை அடிமை என்று நொண்டி நினைக்கும் போதுதான் நொண்டிக்கு நொண்டி என்பதை சுமப்பவன் நினைவுபடுத்த…

  • எது இலவசம்?

    முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 4000 ரூபாய் குடும்ப உதவி திட்டம் உலகம் போற்றும் சிறந்த திட்டம், இதை இலவசம் என்று நினைப்பது தவறான புரிதல். வரி கட்டுவது எப்படி தனி மனிதனின் கடமையோ அதுபோல் அரசு மக்களுக்கு உதவி செய்வதும் அரசின் கடமை. இலவசத்திற்கும், பொருளாதார சமன்பாட்டிற்கும் வேற்றுமை உண்டு, இந்த வேற்றுமையை புரியாதவர்கள் தான் அரசு மக்களுக்கு செய்யும் நலத் திட்டங்கள் அனைத்தையும் இலவசம் என்று எண்ணுகின்றார்கள். அரசு ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்தால் அது…