Politics

  • நாட்டுப்பற்று

    அண்டை நாட்டுடன் போரிட்டால் நாட்டுப்பற்று ஏற்படும்! மாற்று மதத்தினரிடம் மத தீவிரவாதத்தை தூண்டினால் மத ஒற்றுமை ஏற்படும்! மாற்று சாதியினரிடம் சாதிவெறியை தூண்டினால் சாதி ஒற்றுமை ஏற்படும்! இது மனிதனின் இயல்பு. இந்த மூன்றையும் பயன்படுத்தி தான் பி ஜே பி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. இது சிறிது காலத்திற்கு இன்பமாக இருக்கும் இதன் தொடர்ச்சி, தொடர்வினை, ஒட்டுமொத்த வட இந்தியாவையே அழித்துவிடும் என்பது விதி.வினையை விதைத்தவன் வினை யையே அறுவடை செய்வான். தென்னிந்தியாவை சேர்ந்த…

  • உங்களுக்கு வாக்குரிமை உள்ளதா ?

    நம் நாட்டில் வாக்குரிமை உள்ளவர்கள் 20 % சதவிகிதத்தினர் மட்டும்தான், மீதமுள்ள 80 %சதவிகிதத்தினர் வாக்குரிமை இருந்தும், இல்லாதவர்களே. ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கின்றது என்று சொல்கின்றார்களே !அதன் உள் பொருள் அந்த வங்கியில் உள்ளவர்கள் அவர்களுடைய வாக்குரிமையை அடகு வைத்துள்ளார்கள் என்று பொருள்.அவர்களின் கட்சிகள் தொடர்ந்து தவறுகளை செய்தாலும், இவர்களும் தொடர்ந்து அதற்கேதான் அவர்களின் வாக்கை போடுவார்கள் என்பது உறுதி. வாக்குரிமையை இழந்து நிற்கும் கட்சி உறுப்பினர்களே, பொறுப்பாளர்களே, சிந்தியுங்கள் !உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்…

  • இடஒதுக்கீடு

    இடஒதுக்கீடு உரிமையா ?அல்லது கருணையா ?சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு சரியா ?அல்லது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியா? இட ஒதுக்கீடு பற்றிய உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தான் இந்த கட்டுரை. என்னுடைய எழுத்துக்கள் நான் பெற்ற அறிவை தான் வெளிப்படுத்துகின்றது என்பதுஉண்மையாக இருந்தாலும்,நான் இதுவரை இதை எழுதாதது இப்போதுதான் நான் இந்த அறிவைப் பெற்று உள்ளேன் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகின்றது என்று தான் பொருள்.என்னைப் போல் மக்களும் இதுவரை இட ஒதுக்கீட்டைத் தவறாக புரிந்து கொண்டதற்கு…

  • மக்களாட்சி

    மக்களாட்சிதான், மக்களுக்கான ஆட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மக்களை ஆள்பவர்கள் காமராசர், அப்துல் கலாமை போல் சுயவாழ்க்கையை துறந்து மக்களுக்காகவே வாழ்பவராக இருந்தால் மட்டுமே மக்களாட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். செல்வம் கொழித்த மன்னர்களையும், சுயநலவாதிகளையும், தேர்ந்தெடுத்துவிட்டு மக்களுக்கான ஆட்சியை அவர்களிடம் எதிர்பார்ப்பது யார் தவறு ?சிந்தியுங்கள்!. சுய வாழ்வைத் துறந்து, மக்களுக்காகவே வாழ்பவர்களுக்கு தான் என்னுடைய வாக்கு என்று ஒவ்வொருவரும் நினைத்தாலே போதும், காட்சிகள் மாறும், உண்மையான மக்களாட்சி மலரும். சுய வாழ்க்கையைத் துறந்து,…

  • வருமுன் காப்போம்

    பெரும்பான்மையினர் நாட்டை ஆள்வது ஜனநாயகம் அல்ல.பெரும்பாலானவர்கள் நாட்டை ஆள்வதுதான் உன்மையான ஜனநாயகம். பி ஜே பி யின் பிரிவினை அரசியல் ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும் போதுதான் தீவிரவாத சிந்தனை தலைதூக்கும் என்பது உலக வரலாறு. தீவிரவாதத்தின் முன்பு ஜனநாயகம் தோற்கும் போது அனைவரும் போர்களத்தில் சாக வேண்டியது தான். போர்க்களத்தில் ஜனநாயகம் பேச முடியாது, எனவே காலம் தாழ்த்தாமல் அமைதியான நம் ஜனநாயக நாடு தீவிரவாத நாடாக மாறுவதற்கு முன், பி ஜே…

  • ஆன்மீக அரசியல்

    புத்தர், பட்டினத்தார் போன்ற நாட்டைஆண்ட அரசர்கள் ஆன்மீகத்தால் ஆட்சியை விட்டு துறவறம் கொண்டனர் அன்று. இன்று பல கோடி சொத்தை காப்பாற்ற இமயமலை சென்று துறவறம் கொண்டது போல் நடித்து நாட்டை ஆள ரஜினி நினைப்பதற்கு பெயர்தான் ஆன்மீக அரசியல்.ஆன்மீக ஞானம் பெற்றவர் நாட்டை ஆளநினைக்க மாட்டார் என்பது விதி.நெல் மிதக்காது, பதர்தான் மிதக்கும், நேர்மையானவர்கள் ஒருபோதும் தன் நேர்மையை சகாயம் போல் ஏலம் விடமாட்டார்கள். ரஜினி, கமல், சகாயம், போன்ற புதிய தலைவர்களுக்கு கொள்கையே இல்லை,…

  • மாநில சுயாட்சிக் கொள்கையே வென்றது

    பெருந்தலைவர் காமராசர் தேர்தலில் தோற்றதற்கு மக்களின் அறியாமை காரணமல்ல. காமராசர் சார்ந்திருந்த காங்கிரஸ்தான் அதற்கு காரணம்.காங்கிரசுக்கும், திமுக வுக்கும் நடந்த கொள்கை போரில் திமுகவின் மாநில சுயாட்சிக் கொள்கையே வென்றது.காமராசரைவிட அண்ணா நேர்மையானவர், ஒழுக்கமானவர், என்பதற்காக நம் முன்னோர்கள் அண்ணாவை தேர்ந்தெடுக்க வில்லை என்பதை இளைஞர்கள் நினைவில் வைத்துககொள்ள வேண்டும்.மாநில கட்சியான திமுக 1967 இல் தமிழ்நாட்டில் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் நாம் வட மாநிலத்தவருக்கு அடிமைகளாகதான் இருந்திருப்போம். யாரும் இங்கு நேர்மையானவன் அல்லஅனைவரும் பதவிக்கு தான்…

  • விதி – ஆய்வுக் கட்டுரை

    அறிவை பெருவதற்கான கட்டுரை மட்டுமல்ல இது,பாதிக்கப்படவர்கள் உரிமையைப் பெறுவதற்கான புரட்சி கட்டுரை இது.விதி என்பது அறிவியல் உண்மை,நம்முடைய செயலுக்கு விதிதான் காரணம். நம்முடைய சிந்தனை நமக்கு கட்டுப்பட்டு இல்லை, இறந்த காலத்தின் தொடர்போடு தான் உள்ளது. எதை ஒன்றையும் சுயமா சிந்திக்க முடியாது. அமர்ந்திருக்கின்ற நாம் அங்கிருந்து எழுந்திருக்க வேண்டும் என்றாலும் இறந்த காலத்தின் தொடர்போடு அல்லது வெளி உலக தொடர்போடு தான் எழுந்திருக்க முடியும். இறந்த காலத்தின் தொடர்பு இல்லாமல் யார் ஒருவராலும் சுயமாக சிந்திக்க…

  • இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.

    இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.மற்ற மதக் கடவுளை இந்துக்கள் விமர்சிப்பதும், இந்து மதக் கடவுளை மற்ற மத்த்வர்கள் விமர்சிப்பதும்,மதநல்லிணக்கத்துக்கு எதிரானது.நம் வீட்டு முன்னோர்களை நாம் ஆய்வு செய்து பேசும் போது, பக்கத்து வீட்டு முன்னோர்களைப் பற்றி நீ ஏன் பேசமறுகின்றாய் என்று கேட்பது அறிவுள்ள செயலா?.தெரிந்தே தெருச் சண்டையை உண்டாக்கும் சூழ்ச்சி அல்லவா அது.எனவே மாற்று மதக் கடவுள்களை தமிழர்கள் விமர்சிப்பதில்லை,அதனால்தான் தமிழகம் மதக் கலவரம் இல்லா நாடாக உள்ளது.வடநாட்டைப்போல்…

  • சூழ்ச்சி

    திறமையால் தான் வெல்ல முடியும்,சூழ்ச்சியால் வீழ்த்ததான் முடியும், வெல்லமுடியாது. திறமையால் பெறுகின்ற வெற்றிக்கும் சூழ்ச்சியால் பெறுகின்ற வெற்றிக்கும் வேறுபாடு உண்டு.திறமை வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும்.சூழ்ச்சி எதிரிக்கு தோல்வியைக் கொடுக்கும்.வேகமாக ஓடியதால் வெற்றி பெறுவது என்பது திறமை.மற்றவர்களை வேகமாக ஒடாமல் செய்து வெற்றி பெறுவது என்பது சூழ்ச்சி. நாம் ஆன்மிகத்தை துன்பத்தின் வடிகாலாக பார்க்கின்றோம்,ஆனால்BJPயும்,பிராமணர்களும், வருமானத்திற்கான வழியாகப் பார்க்கின்றார்கள்.அதனால் தான் அவர்கள் ஆன்மீகத்தை அரசியல் ஆக்குகின்றார்கள்.BJP வடமாநிலத்தில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் சூழ்ச்சியால் பெற்றவையே. தமிழ்நாட்டில் சூழ்ச்சிக்கு நாம்…