தொடர்வினை_தத்துவம்

  • உணர்வின் பிறப்பு

    நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெறுகிறோம், அதைத் தொடர்ந்து நான் என்ற உணர்வை பெறுகிறோம் இந்த நான் என்ற உணர்வை பெற்ற பிறகுதான் போட்டி, போறாமை, பாசம், நட்பு, அன்பு, வெறுப்பு, போன்ற பல உணர்வுகளை பெறுகின்றோம். கடைசியாக காம உணர்வை பெறுகிறோம். வயது முதிர்ச்சியில்…

  • தூக்குத் தண்டனையும் சமத்துவமும்

    சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி.சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் பொருளாதாரம், அதிகாரம், கல்வி, இனம், மொழி, மதம், அனைத்திலும் இருக்க வேண்டும். தான் உயர்ந்தவன் என்று எவன் ஒருவனும் எதிலும் நினைக்கக் கூடாது.இதற்கு பெயர் தான் உண்மையான சமத்துவம் அதற்கான விதைத்தான் என்னுடைய ஆய்வு, இந்த ஆய்வின் முடிவை புத்தகமாக எழுதி ஊடகங்களுக்கும் பல பெரிய மனிதர்களுக்கும் அனுப்பி…

  • எச்சரிக்கை மணி

    திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் நான் உணவகத்தில் சாப்பிடும்போது சாப்பிட்டது போதாது என்பதை நகைச்சுவையோடு சொல்ல நினைத்து கோட்டை எல்லாம் அழிங்க முதலிலிருந்து என்று சொல்லிவிட்டு நான் மட்டும் சிரித்துக் கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் தான் நான் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருப்பதும்.இந்த சமுதாயத்தால் என்னுடைய எழுத்தை புரிந்துகொள்ளவும் முடியவில்லை, என்னால் புரிய வைக்கவும் முடியவில்லை, இருப்பினும் சென்னையில் 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி என்னுடைய கருத்தை…

  • விதி – ஆய்வுக் கட்டுரை

    அறிவை பெருவதற்கான கட்டுரை மட்டுமல்ல இது,பாதிக்கப்படவர்கள் உரிமையைப் பெறுவதற்கான புரட்சி கட்டுரை இது.விதி என்பது அறிவியல் உண்மை,நம்முடைய செயலுக்கு விதிதான் காரணம். நம்முடைய சிந்தனை நமக்கு கட்டுப்பட்டு இல்லை, இறந்த காலத்தின் தொடர்போடு தான் உள்ளது. எதை ஒன்றையும் சுயமா சிந்திக்க முடியாது. அமர்ந்திருக்கின்ற நாம் அங்கிருந்து எழுந்திருக்க வேண்டும் என்றாலும் இறந்த காலத்தின் தொடர்போடு அல்லது வெளி உலக தொடர்போடு தான் எழுந்திருக்க முடியும். இறந்த காலத்தின் தொடர்பு இல்லாமல் யார் ஒருவராலும் சுயமாக சிந்திக்க…

  • கடவுள்

    கடவுள் என்றால் என்ன ?கடவுள் இருக்கா?இல்லையா ?இதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரை தான் இது.கடவுள் இருக்கு என்பதற்கும் இல்லை என்பதற்கு இதுவரை யாரும் சரியான ஆதாரத்தை கொடுக்கவில்லை.கடவுள் இருந்தால் காட்டு என்றும், கடவுளை பார்க்க முடியாது உணரத்தான் முடியும் என்பதும் முடிவிலா போராட்டமாக தான் உள்ளது அதற்கான முயற்சிதான் இந்த ஆய்வு. பல ஆயிரம் ஆண்டுகளாக பல கோடி மக்கள் கடவுள் இருக்கு என்று நம்புவதற்கு காரணம் அவர்கள் வேண்டிக் கொண்டதில் சில நடந்ததாலும், கடவுளை…

  • சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!

    தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடியவில்லை இறந்த காலத்தின் நிகழ்வுகள்தான் ஒருவனுடைய இன்றைய செயலை தீர்மானிக்கின்றன என்பதை சமுதாயம் அறிவியல் பூர்வமாக உணர்ந்த பின் குற்றவாளியின் செயலுக்கு தண்டனை கொடுப்பது சரியா? சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!

  • புதிய நீதி

    ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. – புத்தர், பட்டினத்தார், மாணிக்க வாசாகர் முதல் பல்லாயிரம் மத தலைவர்கள் சொன்னதும், சொல்லிக்கொண்டு இருப்பதும். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் மதி பாதி, விதி பாதி. -சத்குரு ஜக்கி வாசுதேவ். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும், கடவுள் காரணம் அல்ல; விதியை நினைப்பவன் முட்டாள், மதியை நினைப்பவன் அறிவாளி.…

  • என் ஆய்வு முடிவுகள்

    1.அறிவால் அனைவரும் சமம். 2.அனுபவம் இல்லாமல் புத்தகம் படிப்பதால் அறிவு வளராது. 3.அறிவு என்பது படிப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. 4.அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது. அறிவை அறிவால் ஆளுமை செய்வது ஏழாவது அறிவு. 5.எதை நாம் பார்க்கின்றோமோ, எதை நாம் கேட்கின்றோமோ அது நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளும். 6.திருமனத்திற்கு முன் காதல் என்பது விபச்சாரத்திற்கு சமமானது. 7.தூக்கு தண்டனை என்பது அறிவற்ற சமுதாயத்தின் செயல். 8.தண்டனை என்ற வார்த்தையே புதிய நீதிக்கு…

  • சாதனையும், சேவையும்

    உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை போல் நான் இருப்பது என் இயல்பு, இது எப்படி சாதனையாக முடியும்.. உசேன் போல்ட் பிறப்பாலும் வளர்ப்பாலும் வேகமாக ஓடக்கூடிய திறனை பெற்று இருக்கின்றார் என்பது அவருடைய இயல்பு இதை சாதனை என்று எப்படி சொல்ல முடியும்.…

  • வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும்.

    “வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது.காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்” பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும் வேறுபாடு உண்டு.அனுபவமுள்ள பெரியவர் சொல்வதை அனுபவமில்லாத சிரியவர் கேட்டு நடந்தால் நல்லது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அனுபவமுள்ள முன்னோர்கள் சொன்னதை தற்போது வாழும் அனுபவம் உள்ளவர்கள் கேட்க வேண்டியதோ, அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டியதோ இல்லை. காரணம்…