தொடர்வினை_தத்துவம்

  • ஆன்மீகம் ஓர் தொழில்

    ஆன்மீகம் ஓர் தொழில். மக்களுக்கு கெடுதல் என்று தெரிந்தும் அரசு லாபத்திற்காக சாராய கடையை நடத்துவது போல், கடவுளை பற்றிய அறிவை மக்களுக்கு ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கொடுக்காமல் ஆன்மீகத்தை ஒரு தொழிலாக செய்துவருகின்றார்கள். விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆன்மீக தொழிலில்தான் அதிகமானோர் சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் பலர் பயன்பெறுகின்றார்கள், ஆன்மீகம் ஓர் தொழில் என்பதால் அவர்களுடைய வாடிக்கையாளர்களை இழக்க கூடாது என்பதற்கு மக்களிடம் மூடநம்பிக்கையையும், மதப்பிரிவினையையும் ஏற்படுத்துகின்றார்கள்.என்னுடைய ஆய்வும் ஊடகத்தால் மறைக்கப்படுகின்றது. மது பிரியர்களை போதையின்…

  • நம் மனசாட்சி மாறவேண்டும்

    ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு.அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை.நீதி மாறவேண்டும் என்றால் சமுதாயத்தின் அறிவு மாறவேண்டும்.குற்றவாளி தண்டனைக்கு உரியவன் அல்ல இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அறிவியல் உண்மையை எப்போது இந்த உலகம் உணர்கின்றதோ அப்போதுதான் தூக்குத்தண்டனை தடை செய்யப்படும். இதை நான் எழுதுவதால் இந்த உலகில் நான் மட்டுமே அறிவாளி, மற்றவர்கள் அனைவரும் அறிவு இல்லாதவர்கள் என்று பொருளல்ல. அறிவால் யாரும்,…

  • விதியை நம்பாதீர்கள் !

    விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு புரிய வைப்பதும் கடினம், நம்ப வைப்பதும் கடினம். நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்ற தொடர்வினை தத்துவம் தான் விதி. விதி உண்மை என்று புரிந்துகொள்வதற்கும், விதியை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. விதி உண்மை என்று நான்…

  • வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு

    ” வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு ” வெளி உலக தொடர்போ, இறந்த கால தொடர்போ இல்லாமல் தூக்கு தண்டனையை கொடுக்கும் நீதி அரசர்களுடைய சிந்தனையும், செயலும் இருக்கும் என்று யாராவது நிருபித்து விட்டால் அவருக்கு 1,00,00,000 ரூபாய் பரிசாக குமார் பதிப்பகம் கொடுக்கும்.

  • தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும்

    உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றது. 70 ஆண்டுகளுக்கு முன் திராவிட கழகம் வளர்ச்சி அடையும்போது படித்தவர்களும். கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் இருந்ததால்தான் தி க வின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் தற்போது பகுத்தறிவு இல்லாதவர்களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் அதிகமாக இருப்பதால்தான் திராவிட கழகம் மக்களிடம் செல்வாக்கை…

  • தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல

    தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல, என்னுடைய செயல்கள் அனைத்தும் (இயற்கையின் )இறைவனின் செயல்தான் என்ற புரிதலேஆன்மீகம். ஆன்மீகத்தால் மட்டுமே பூட்டு இல்லாத வீட்டையும், காவல் நிலையம் இல்லாத நாட்டையும் உருவாக்க முடியும். ஆன்மீகத்தால் மட்டுமே நீதியையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும், சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், மத நல்லிணக்கத்தையும்,உலகில் ஏற்படுத்த முடியும்.

  • நின்னை சரணடைந்தேன்…

    பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை, காரணம் நான் வேறு ஒரு அறிவு உலகத்திலும், படிக்கின்றவர்கள் வேறு ஒரு அறிவு உலகத்திலும் இருப்பதுதான். உலகமக்கள் அனைவரையும் புதிய அறிவு உலகத்திற்கு அழைத்துச் செல்வது தான் என்னுடைய எழுத்தின் நோக்கம். ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை என்ற ஆரம்ப நிலையிலிருந்து, புரிதல்…

  • நாட்டுப்பற்று

    அண்டை நாட்டுடன் போரிட்டால் நாட்டுப்பற்று ஏற்படும்! மாற்று மதத்தினரிடம் மத தீவிரவாதத்தை தூண்டினால் மத ஒற்றுமை ஏற்படும்! மாற்று சாதியினரிடம் சாதிவெறியை தூண்டினால் சாதி ஒற்றுமை ஏற்படும்! இது மனிதனின் இயல்பு. இந்த மூன்றையும் பயன்படுத்தி தான் பி ஜே பி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. இது சிறிது காலத்திற்கு இன்பமாக இருக்கும் இதன் தொடர்ச்சி, தொடர்வினை, ஒட்டுமொத்த வட இந்தியாவையே அழித்துவிடும் என்பது விதி.வினையை விதைத்தவன் வினை யையே அறுவடை செய்வான். தென்னிந்தியாவை சேர்ந்த…

  • உடுமலைப்பேட்டை சங்கர்

    உடுமலைப்பேட்டை சங்கரின் செயலை கண்டித்து காவல்துறையும், நீதித்துறையும், கௌசல்யாவை, சங்கரிடம் இருந்து மீட்டு கௌசல்யா பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தால், கௌசல்யாவும், கௌசல்யா குடும்பமும், சங்கரும், சங்கர் குடும்பமும், ஆனந்தமான வாழ்வை வாழ்ந்து இருப்பார்கள். சங்கரும், கௌசல்யாவும், சிறு வயதில் தெரியாமல் செய்த தவறுக்கு அங்கீகாரம் கொடுத்து அவர்களை சீரழித்தது நம்முடைய சட்டமும், காவல் துறையும் தான்.ஒழுக்கம் இல்லாத கௌசல்யாவுக்கு பாராட்டும், ஒழுக்கமாக வாழ்ந்த கௌசல்யா பெற்றோர்களுக்கு ஆணவக்காரர்கள் என்ற பட்டயம் கொடுத்ததும் நம் ஊடகங்கள் தான்.இதுபோன்ற தொடர் நிகழ்வுகளின்…

  • நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல்துறையே !

    பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், குற்றம் செய்தவரிடம் பணம் வாங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் செய்தவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு குற்றம் செய்தவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டால், இந்த அனுபவம் குற்றம் செய்தவருக்கு மீண்டும் குற்றம் செய்ய வேண்டும் என்ற அறிவையும்,பாதிக்கப்பட்டவருக்கு காவல்துறையை நம்புவது தவறு, குற்றம் செய்தவனுக்கு நாமே தண்டனை கொடுப்பது தான் சரி என்ற அறிவையும் கொடுக்கும். அரசு ஊழியர்களை போல் இல்லாமல் சமுதாயத்தில் நீதியை…