Opinion
-
வைரமுத்து பேசியது சரியா?
இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன். வைரமுத்து சொன்னது போல் இசையும், மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா? அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று. என்னுடைய…
-
இசையும், பாடலும்
திரைப்பட பாடலை பொருத்தவரையில், மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும்.மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது.வைரமுத்து அவர்களை ஒழுக்கம்…
-
பெரியவர்கள் காலில் விழுவது சரியா?
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா! ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உணர்வின் வெளிப்பாடு. ஒருவர் நமக்கு அடிமையாக இருப்பதன் மூலம் நாம்பெரும் மகிழ்ச்சி உணர்வின் வெளிப்பாடு, உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். மனிதன் அறிவால் உணர்வை ஆளுமை செய்வதால் தான் ! மிருகத்தைவிட அறிவால் உயர்ந்து நிற்கின்றான். உணர்வை அறிவால் ஆளுமை செய்ய…
-
உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா
உனக்கு அறிவு இருக்கா?-இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜா அவர்கள் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு “உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்டது ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது, இன்றும் இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் அதை மேற்கோள்காட்டி தான் விமர்சிக்கின்றார்கள். “உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்பது குற்றமா ! என்று ஆய்வு செய்யவே இந்த கட்டுரை. நான் இளையராஜா சொன்னதை நியாயப்படுத்த இதை எழுதவில்லை, அறிவைப் பற்றி ஆய்வு செய்து…
-
இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா?
#இசைஞானி #இளையராஜா இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா? அல்லது இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் தவறாக விமர்சிக்கின்றார்களா ?அதாவது பொருளின் தரத்தில் குறை இருக்கா அல்லது தரத்தை உறுதி செய்யும் அளவுகோலில் தவறு இருக்கா என்பதை இந்த ஆய்வில் பார்ப்போம். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின்படி நம்முடைய ஐந்து புலன்களால் மட்டுமே அறிவை பெற முடியும். நாம் ஒரு பொருளை நுட்பமாக பார்க்கும் பொழுது நம்முடைய பார்வையின் பரப்பளவு குறைந்துவிடும், நாம் விரிந்து பார்க்கும் பொழுது நுட்பம் குறைந்துவிடும்…
-
இளையராஜா, ஆஸ்கார்
இளையராஜா அவர்கள் ஆஸ்கார் விருது வாங்காதது இளையராஜா இயலாமையா ? அல்லது இளையராஜாவிற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று வருந்துவது ரசிகர்களின் அறியாமையா? யார் சிறந்த தாய் என்பதை பெற்ற பிள்ளைகள் சொல்வது தான் சரியாக இருக்குமே தவிர வேறொரு தாயின் பிள்ளை சொல்வது சரியாக இருக்காது. இசையை அமைப்பது அறிவு சார்ந்ததாக இருந்தாலும் இசை உணர்வை அடிப்படையாகக் கொண்டது, இந்த மக்களின் உணர்வை எந்த இசை தூண்டுகின்றதோ அதுவே சிறந்த இசை. நம் மொழி தெரியாத,…
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு
பிள்ளைகளை பதட்டப்படுத்தாதீர்கள் மாறாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள், தோல்வியை எதிர்கொள்ள தயார் படுத்துங்கள், தோல்வி அடைந்தவன் வாழ முடியாது என்றால் இந்த உலகில் யாரும் உயிராக இருக்க முடியாது. நரியின் கதை படி கைக்கு எட்டாத பழம் “சீ சீ இந்தப் பழம் புளிக்கும் “என்பதை போல் நமக்குக் கிடைக்காதது அனைத்தும் நமக்கு தேவைப்படாதது என்ற சிந்தனையே வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தைக் கொடுக்கும். தோல்வியை எதிர்கொள்வது தான் வாழ்க்கையின் வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு துணையாக இருங்கள்,…
-
படித்தவன்
தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.
-
விளையாட்டு
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் நம் நாட்டுக்கு தேவையா?அதனால் நாட்டுக்கு என்ன பயன்? விளையாட்டு, விளையாட்டாக இருந்தால்தான் அது விளையாட்டு. விளையாட்டு போட்டியாக மாறி விட்டால் அது விளையாட்டு அல்ல, அது பொருளாதாரம் சார்ந்த தொழில். தமிழில் விளையாட்டு என்ற சொல் அற்புதமான சொல், இந்த சொல்லுக்கு பொருத்தமாக ஆங்கிலத்தில் sports என்று சொல்லாமல் fun என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். விளையாட்டில் எந்த ஒரு கடமையையும் சுமக்காமல் சுகமாக அனுபவித்து விளையான்டால் தான் அது…
-
தாயா ! தாரமா !!
திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும் அது அவர்களுடைய கருத்தாகதான் உள்ளதே தவிர, அதற்கான தெளிவு இல்லை. அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு. முக்காலத்தையும் உணர்ந்தவன் இந்த உலகில் யாரும் இல்லை, ஆனால் முக்காலத்திலும் வாழ்பவன் தான் மனிதன். விலங்குகள் நிகழ்காலத்தில்மட்டும் தான் வாழ்கின்றன, ஆனால் மனிதன் இறந்த…
