Opinion
-
ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு சரியா?
கடவுள் இல்லை !ஆனால் கடவுளை வணங்கினால் நன்மைகள் உண்டு என்ற முரண்பட்ட அறிவியல் உண்மையை ஆய்வு செய்து 10 ஆண்டுகளுக்கு முன்பே “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “ என்ற புத்தகத்தில் நான் எழுதி இருக்கின்றேன். கடவுள் இல்லை என்று என்னுடைய ஆய்வு உறுதி செய்த போதிலும், கடவுள் இல்லை என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொண்ட போதிலும், கடவுளை நான் தினமும் வணங்கிக் கொண்டு தான் உள்ளேன். காரணம், என்னை நான் ஒழுங்குபடுத்தி கொள்ளவே.…
-
நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல்துறையே !
பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், குற்றம் செய்தவரிடம் பணம் வாங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் செய்தவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு குற்றம் செய்தவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டால், இந்த அனுபவம் குற்றம் செய்தவருக்கு மீண்டும் குற்றம் செய்ய வேண்டும் என்ற அறிவையும்,பாதிக்கப்பட்டவருக்கு காவல்துறையை நம்புவது தவறு, குற்றம் செய்தவனுக்கு நாமே தண்டனை கொடுப்பது தான் சரி என்ற அறிவையும் கொடுக்கும். அரசு ஊழியர்களை போல் இல்லாமல் சமுதாயத்தில் நீதியை…
-
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன?
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,கற்பின் சிறப்பை, குடும்ப உறவு முறையை சமுதாயத்தில் சீர்குலைப்பது தான் முற்போக்கு சிந்தனை யாளர்களின் முதல் பணி. ஒழுக்கமான சமுதாயத்தில் ஒழுக்கம் இல்லாதவர்களுக்கு முக்கியத்துவம் பெற்று கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை. தெளிவாக சொல்லவேண்டும் என்றால் நம்வீட்டு தக்காளி கூடையில் ஒருதக்காளி அழுகிவிட்டாள் அப்புறப்படுத்திவிட்டு மீதம்முள்ள…
-
அனைவருக்கும் சம ஊதியம்
100 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு மனிதனுக்குள் தோன்றிய சிந்தனைதான் ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தார்த்தம், அவர் யார் என்று நமக்குத் தெரியாது ஆனால் அவர் செய்த புண்ணியத்தால்தான் நம் பெண்பிள்ளைகள் அனைத்து உரிமையும் பெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்கள். வலுவான ஆளுமைத் திறன் படைத்த ஆணுக்கு சமமானவர் பெண் என்பதை எந்த ஒரு ஆணும் ஆரம்பத்தில் ஏற்கவில்லை. பல ஆண்டுகள் கடந்த பிறகு தான் ஒரு சிலருக்கு புரிந்தது ஆணும் பெண்ணும் சமம் என்று சொன்னது…
-
மக்கள் முன்னேறவே முடியாது
நோயாளியின் நோய்க்கு தேவையான மருந்தும் பரிசோதனையும் எழுதாமல் தனக்கு எதில் லாபம் அதிகமோ அதை எழுதும் மருத்துவர் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த செய்தி நல்லதோ அதை சொல்லாமல் ஊடகத்திற்கு எந்த செய்தி லாபத்தை கொடுக்கின்றதோ அதை சொல்லும் ஊடகங்கள் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த திட்டம் நல்லதோ அதை கொண்டுவராமல், அரசியல் தலைவருக்கு பயன் தரக்கூடிய திட்டத்தையும்,இலவச திட்டத்தையும் கொண்டுவரும் அரசியல் தலைவர் இருக்கும் வரை! யார் சிறந்த தலைவர் என்று பார்க்காமல் யார் பணம்…
-
உழவால் உழவன் வாழ வாழ்த்து.
வாழ்வதர்க்காக சாப்பிட்டால் ஆரோக்கியம் சாப்பிடுவதர்காக வாழ்ந்தால் கேடு அதுபோல் உழவை காத்தால் உழவன் வாழ்வான், உழவனை காத்தால் உழவு அழிந்துவிடும். 100 நாள் வேளை திட்டம் மனித சக்தியை பயன் படுத்துவதர்க்காக உருவாக்கிய மேன்மையான திட்டம்,ஆனால் நடைமுறையில் அதர்க்கு எதிர்மறையாக மனித ஆற்றல் வீணாகுவது போல்,நம்முடைய அரசு நீர் ஆதாரத்தை உருவாக்கி உழவை பாதுகாக்காமல், அரசு உழவனுக்கு உதவினால் உழவன் சோம்பேறியாய் ஆகிவிடுவான் உழவும் அழிந்துவிடும்,உழவனும் அழிந்து விடுவான் மக்களும் வருமையில் அழிந்து விடுவர்.எனவே அரசு உழவைத்தான்…
-
திருமணத்துக்கு முன் காதல்
திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது! இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும்,திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ, கணவனாகவோ, என்னவேண்டும் என்ற சமுதாயஒழுக்கத்தை மீறும் இரண்டுசெயலும் தவறானசெயல்தான் தவறுச்செய்யாத மனிதனே இல்லை !ஆனால் தான் செய்த தவறை மறைபதற்கும், பணம்சேர்ப்பதற்கும்,மக்களீடம் காதல் உணர்வைதூண்டி,திருமணத்துக்கு முன் காதல்செய்வதை ஆதரிப்பவன் மனிதனே அல்ல. மாறுபட்டக்கருத்துடைய நண்பர்கள் நான் ஏழுதியபுத்தகத்தை படியுங்கள்.
