மறுப்புக்_கட்டுரை

  • இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா?

    #இசைஞானி #இளையராஜா இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா? அல்லது இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் தவறாக விமர்சிக்கின்றார்களா ?அதாவது பொருளின் தரத்தில் குறை இருக்கா அல்லது தரத்தை உறுதி செய்யும் அளவுகோலில் தவறு இருக்கா என்பதை இந்த ஆய்வில் பார்ப்போம். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின்படி நம்முடைய ஐந்து புலன்களால் மட்டுமே அறிவை பெற முடியும். நாம் ஒரு பொருளை நுட்பமாக பார்க்கும் பொழுது நம்முடைய பார்வையின் பரப்பளவு குறைந்துவிடும், நாம் விரிந்து பார்க்கும் பொழுது நுட்பம் குறைந்துவிடும்…

  • உலக புத்தக தினம்

    புத்தகம் கதையை சொல்லும், கவிதையைசொல்லும், தகவலைச் சொல்லும், மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும், ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது. அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாது. அறிவு என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமல் இந்த உலகம் புத்தக தினம் கொண்டாடுவதால் எந்த பயனும் இல்லை. புத்தகம் யாருக்கு அறிவைக் கொடுக்கும், யாருக்கு தகவலை மட்டும் கொடுக்கும் என்ற புரிதலுக்கு நான் எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “ என்ற…

  • புதிய பெரியாரியம்

    பெரியார் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் அல்ல !கடவுளின் பெயரால் மனிதர்களுக்குள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய தாலேயே கடவுளை பெரியார் எதிர்த்தார் என்று கூறும் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள்,பெரியார் சாதியை எதிர்க்கவில்லை, ”சாதியால்“ உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய தாலேயே சாதியை எதிர்த்தார் என்று புதிய பெரியாரியம் பேசும் காலம் நெருங்கிவிட்டது. பெரியார் வாழ்ந்த காலத்தில் அரசு பதவிகளில் உயர் சாதியைச் சேர்ந்தவர்களே இருந்ததால், சாதியவடிவில் இருந்த அதிகார வர்க்கத்துக்கு எதிராக சாமானியமக்களுக்காக பெரியார்…

  • வாழ்க புரட்சிக் கவி பாரதியின் புரட்சி

    “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பதில்லையே !!“ என்று வீர முழக்கத்தை நமக்கு அறிவாக கொடுத்துச் சென்ற புரட்சிக்கவி பாரதி நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் இன்றளவும் அவருடைய புரட்சி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாலேயே! பாரதி கவிதை மட்டும் எழுதி இருந்தால் அவர் மறைந்தபொழுதிலேயே மக்கள் பாரதியை மறந்திருப்பார்கள், ஆனால் பாரதி பெண் விடுதலைக்காகவும், சாதி சமத்துவத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் களத்தில் இறங்கி சமரசமில்லாமல் புரட்சி செய்ததாலேயே…

  • உளுத்துப்போன ஊடகத்தூன்

    மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று எல்லோரும் சொல்லும் பொழுது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அசிங்கம். அது போல் தான் இன்றைய ஊடகங்களும், மக்கள் எவ்வழியோ அவ்வழியே அவர்களுடையதும். மக்கள் நஞ்சை விரும்பினாலும் அதையும் கொடுக்க தயங்க மாட்டார்கள், காரணம் ஊடகங்களுக்கு இது வியாபாரம். கர்நாடகாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம் எல் ஏக்கள் இந்த சட்டமன்ற காலம் முடியும் வரையில் தேர்தலில் போட்டியிட தடை விதித்து சபாநாயகர் உத்தரவு இட்டதை தவறு, இவருக்கு இந்த…

  • வாழ்க தமிழ் ! சரியான முழக்கமா ?

    தமிழ் வாழ்க என்று சொல்லும் அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இதுவரை அதற்கான முயற்சியை செய்து இருக்கின்றார்களா என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். நம்முடைய இலக்கு தமிழ் மொழியும், இந்தி மொழியைப்போல் தேசிய அலுவல் மொழிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான். இந்த அங்கீகாரம் நம் மொழிக்கு கிடைத்தால் மட்டுமே நம் மொழி நமக்கு பயனுள்ள மொழியாக இருக்கும். தற்போதுள்ள மொழிக் கொள்கையின் படி, இந்தியைத் தவிர அனைத்து மாநில மொழிகளும் பயனில்லாத மொழிகள்…

  • பாலியல் துன்புறுத்தல் #metoo

    நீதி உலகெங்கும் ஒன்றல்ல, இந்தியாவின் நீதி, அரபுநாடுகளில் அநீதி, இந்தியாவில் திருமணத்திற்கு முன் காதலிப்பது என்பது புனிதமானது. அரபு நாடுகளில் இதற்கு தூக்குத் தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் காதலித்தவனுக்கு அரபு நாட்டில் தூக்கு தண்டனை கொடுப்பது உலக நீதி அல்ல. திரை உலகம், பாலியல் ஒழுக்கத்தில் அது ஒரு தனி உலகம்.திரை உலகத்தின் பாலியல் நீதி என்பது, நிஜ உலகத்தின் நீதிக்கு முற்றிலும் முரணானது. திரை உலகத்தில் ஆண்-பெண் வேற்றுமையே இல்லை, எனவே அங்கு…

  • முத்தலாக் தடை சட்டம்

    இஸ்லாமிய ஆணோ,பெண்ணோ, மூன்று முறை தலாக் என்று சொன்னால்,அவர்களுடைய மணவாழ்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பொருள் இது அவர்களுடைய கலாச்சாரம். இது பெண் கொடுமையா ?புதிய சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? இஸ்லாமிய தம்பதிகள் இனி சேர்ந்து வாழ்வார்களா? இதுதான் நம் கேள்வி. இந்து மதக் கலாச்சாரப்படி ஒரு ஆண் ஒரு பெண் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி விட்டால் போதும்,அன்று முதல் அவள் அவனின் மனைவி.இது எப்படி! யார் வேண்டுமானாலும் யார்கழுத்திலும் கயிறை கட்டிவிட்டால்…

  • சங்கர் கொலை வழக்கு

    சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால். சங்கரால் பாதிக்கப்பட்டு நிம்மதி இழந்த ஒருவர் இவனை கொலை செய்தால்தான் இதுபோன்ற தவறை வேறு ஒருவன் இந்த சமுதாயத்தில் இனி செய்யமாட்டான் என்று எண்ணி கொலை செய்ததில் என்ன தவறு உள்ளது. மக்களிடம் சமத்துவம் மலர கொலையோ, தூக்குத் தண்டனையோ, தீர்வு அல்ல.அதற்குத் தீர்வு நீதித்துறை…

  • மகளிர் மசோதா

    அனைத்துத் தொகுதியிலும் ஆண் பெண் வேற்றுமை இல்லாமல் அனைவரும் போட்டியிடலாம் என்பது திறனுள்ளவர் மக்களுக்கான பணியை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் புதிய மகளிர் மசோதா ஆண்களை அடிமைப்படுத்தும் செயல், ஓட்டுக்காக மக்களை முட்டாளாக்கும் செயல். சோதனை முயற்சியாக ஒரு கிராமத்தை தேர்வு செய்து 33 குடும்பத்தை பெண்கள் நிர்வகிக்க வேண்டும், சுழற்சி அடிப்படையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் வேறு 33 குடும்பத்தை பெண் நிர்வகிக்க வேண்டும் ஆறு ஆண்டுக்குப் பிறகு…