மனமும்_உணர்வும்

  • பேய் இருக்கா?!!

    நடந்த உண்மை சம்பவம் !! என்னிடம் வேலை செய்பவர் பேயை பார்த்ததாக சொன்னார், நான் சொன்னேன் பேய்யென்று ஒன்று இல்லை அது ஒரு பிரம்மை என்று, அதற்கு அவர் சொன்னார் பேய் இருப்பது உண்மை அது சிலர் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்றார், நான் சொன்னேன் ஆமாம் சிலருக்கு மட்டும்தான் தெரியும் ஏன் தெரியுமா! நம் கண் ஒரு காட்சியை பார்த்து மூளைக்கு செய்தியை அனுப்புவதால் தான் நாம் பார்க்கும் பொருள் நமக்கு தெரிகின்றது. இரவு…

  • பாலம்

    ஆறாவது அறிவு இல்லாத மனிதனும், மிருகமும் அறிவால் ஒன்று. மிருகமாக இருக்கும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவை கொடுப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த கட்டுரைக்கு “பாலம் “என்று தலைப்பு வைத்துள்ளேன்.ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு அல்ல, மிருகத்திடமும் பகுத்தறிவு இருப்பதால் ஆறாவது அறிவு என்பது உணர்விலிருந்து விடுபட்டு சிந்திப்பதால் பெறுவதே ஆறாவது அறிவு. நான் 25 சதவிகிதம் மிருகமாகவும், 50 சதவிகிதம் மனிதனாகவும்,மிதம்உள்ள 25 சதவீதம் உணர்வில்லாத இயந்திரம் என்ற நிலைக்கு நான் சென்றதால் தான் ஆறாவது…

  • நம்பிக்கை

    நம்பிக்கை என்பது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது அல்ல.நம்பிக்கை என்பது நேர்மறை சிந்தனை.எனக்கு எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும்,நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே,நிச்சயம் நான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவேன் என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நிலையில்லா இந்த உலகில் தன்னம்பிக்கை முதல் கடவுள் நம்பிக்கை வரை அனைத்து நம்பிக்கைகளும் பொய்யே, ஆனால் நிலையில்லா இந்த உலகில்“இந்த நிலையும் மாறும் “என்ற நம்பிக்கையே உண்மையானது. இந்த நம்பிக்கை தான் ஒவ்வொரு மனிதனையும் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றது.

  • வாழ்வியல் அறிவு

    அறிவு துன்பத்துக்கு மருந்தாகவும், அறியாமை இன்பத்திற்கு வித்தாகவும் இருக்கின்றது. அறிவு வலிக்கு மருந்து, இது வலி உணர்வை போக்குவதோடு மட்டுமில்லாமல் பக்கவிளைவாக இன்ப உணர்வையும் நம்மிடமிருந்து போக்கி விடும் எனவே வாழ்வியல் அறிவை வாழ்க்கையில் அனைத்து இன்பத்தையும் அனுபவித்த 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொடுத்தால் மட்டுமே சிறந்தது. மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை, இந்த நான் என்ற உணர்வில் இருந்து விடுதலையை ஒருவர் அறிவின் மூலம் பெற்றுவிட்டால் அவர் உயிருடன் இருக்கும் போதே இறந்து…

  • விளையாட்டு

    ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் நம் நாட்டுக்கு தேவையா?அதனால் நாட்டுக்கு என்ன பயன்? விளையாட்டு, விளையாட்டாக இருந்தால்தான் அது விளையாட்டு. விளையாட்டு  போட்டியாக மாறி விட்டால் அது விளையாட்டு அல்ல, அது பொருளாதாரம் சார்ந்த தொழில். தமிழில் விளையாட்டு என்ற சொல் அற்புதமான சொல், இந்த சொல்லுக்கு பொருத்தமாக ஆங்கிலத்தில் sports என்று சொல்லாமல் fun என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். விளையாட்டில் எந்த ஒரு கடமையையும் சுமக்காமல் சுகமாக அனுபவித்து விளையான்டால் தான் அது…

  • நம்மை செதுக்கும் சிற்பிகள்

    நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள்.வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவதும், நம்அறிவாலும், உணர்வாலும் நாம் தேர்வு செய்யும் நண்பர்களால்தான்.

  • வாழத் தெரியாத அறிவாளிகள்

    முற்றும் துறந்தவர்கள் தன் உணர்வை அறிவால் அடக்கியாளும் வல்லமையை (அறிவில் சிறந்த, உணர்வை அடக்கும் அறிவை பெற்று இருந்தாலும் ) உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை என்ற அறிவை பெறாது வாழ்க்கையை இழந்தவர்களே. முற்றும் துறக்க, அனைத்து உணர்வுகளையும் அடக்கியாளும் அறிவு எனக்கு இல்லை என்றாலும், உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை, அறிவு வாழ்க்கை அல்ல என்ற அறிவை நான் பெற்றிருப்பதன் வெளிப்பாடு, அறிவால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை, அறிவால் அனைவரும் சமம் என்பதே.

  • கடவுள் நம்பிக்கை

    ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடினால் தான் முதல் பரிசை பெற முடியும்.இரண்டாவது இடத்தில் ஓடுகின்ற ஒருவன் ரசிகர்களின் உற்சாகத்தால் முதல் இடத்தைப் பிடிக்கின்றான்.ரசிகர்களின் உற்சாகம் ஒருவனுக்கு எப்படி சக்தியை கொடுத்திருக்கும்.அறிவியல்படி வாய்ப்பே இல்லை,ஆனால் அனுபவரீதியாக உண்மை.ரசிகர்களின் உற்சாகம் இரண்டாவது இடத்தில் ஒடுபவனுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது,அந்த நம்பிக்கைதான் அவனை முதலிடத்தில் வெற்றிபெற செய்துள்ளது.இது போல் நோயால் பாதிக்கப்பட்டவர் கடவுளை வணங்குவதால் அவருக்குள் நம்பிக்கை பிறக்கிறது அது அவருடைய நோயை குணப்படுத்துகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை.கடவுள் இல்லை ஆனால் கடவுளை வணங்குவது தவறு…

  • உணர்வின் பிறப்பு

    நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெறுகிறோம், அதைத் தொடர்ந்து நான் என்ற உணர்வை பெறுகிறோம் இந்த நான் என்ற உணர்வை பெற்ற பிறகுதான் போட்டி, போறாமை, பாசம், நட்பு, அன்பு, வெறுப்பு, போன்ற பல உணர்வுகளை பெறுகின்றோம். கடைசியாக காம உணர்வை பெறுகிறோம். வயது முதிர்ச்சியில்…

  • மரணம்

    மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இருக்கும்போதே மரணத்தை உணர முடியும். நம்முடைய அறிவின் முதிர்ச்சியால் நான் நான்அல்ல என்ற ஞான நிலையை நாம் அடையும் போது தற்காலிகமாக ஒரு சில கணம் நான் என்ற உணர்வில் இருந்து முழுவதுமாக விடை பெற்று விடுவோம் இந்த நிலை மரணத்திற்குச் சமமானது.…