குமார்_விதிகள்
-
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்…
கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள் இல்லை என்பதை புரிய வைக்க அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நான் எழுதிய விதி உண்மை என்ற ஆய்வுக்கட்டுரை மட்டுமே உள்ளது. இதை ஆத்திகமும், நாத்திகமும் புரியாதது போல் தவிர்க்கின்றது. விதி உண்மை என்ற அறிவியல் உண்மையை ஏற்காமல் (புரிந்துகொள்ளலாம்)…
-
அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும்
ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்திற்கு இல்லாததால்தான். அனுபவம் இல்லாமல் படிப்பால் தான் பெற்ற தகவலை அறிவாக நினைக்கும் இந்த சமுதாயத்தை அறியாமையில் இருந்து மீட்டெடுக்க, நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதி இருந்தாலும் அந்தத் தகவலை அறிவாக மாற்றி கொள்ளும் அனுபவம் (அறிவு )படித்தவர்களுக்கு…
-
நம்பிக்கையும், புரிதலும்
யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது அறிவின் வெளிப்பாடு. கடவுள் இருக்கு என்ற நம்பிக்கையும், கடவுள் இல்லை என்ற நம்பிக்கையும் அறியாமையின் வெளிப்பாடே. ஒரு நம்பிக்கையை மற்றொரு நம்பிக்கையால் சிதைப்பதும் அறியாமையின் வெளிப்பாடே, இந்த இரண்டு நம்பிக்கையையும் தவறு என்று அறிவியலால் புரிந்து கொண்டால் அது தான் அறிவு. இந்த அறிவை…
-
தூக்குத் தண்டனை சரியா?
நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியே அந்த சமுதாயத்தின் நீதியை மாற்றும். சாலை விபத்தால் உலகில் பல கோடி அப்பாவி மக்கள் இறக்கின்றார்கள் இதற்கு 90 சதவிகிதம் ஓட்டுனரின் தவறே காரணம், ஆனால் சட்டம் இந்த நிகழ்வை விபத்து என்றே பார்க்கின்றது. அதுபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே பல நோயாளிகள் இறப்பதற்கு காரணமாக உள்ளது…
-
நின்னை சரணடைந்தேன்…
பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை, காரணம் நான் வேறு ஒரு அறிவு உலகத்திலும், படிக்கின்றவர்கள் வேறு ஒரு அறிவு உலகத்திலும் இருப்பதுதான். உலகமக்கள் அனைவரையும் புதிய அறிவு உலகத்திற்கு அழைத்துச் செல்வது தான் என்னுடைய எழுத்தின் நோக்கம். ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை என்ற ஆரம்ப நிலையிலிருந்து, புரிதல்…
-
விதி
சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந்தவர்களால் எழுதப்பட்டவை. விதி என்ற வார்த்தையை இவர்கள் முரண்பாடாக பயன்படுத்தி உள்ளனர். உண்மையில் “விதியின்” பொருள் என்ன?“விதி என்பது எது நடக்குமோ, அது நடந்தே தீரும், மாற்றத்திற்கு உட்படாதது, மாற்ற முடியாது என்று பொருள்”. சூரியன் காலையில் கிழிக்கில் உதிக்கும் என்பது விதி. தண்ணீரை…
-
திருமணத்துக்கு முன் காதல்
திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது! இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும்,திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ, கணவனாகவோ, என்னவேண்டும் என்ற சமுதாயஒழுக்கத்தை மீறும் இரண்டுசெயலும் தவறானசெயல்தான் தவறுச்செய்யாத மனிதனே இல்லை !ஆனால் தான் செய்த தவறை மறைபதற்கும், பணம்சேர்ப்பதற்கும்,மக்களீடம் காதல் உணர்வைதூண்டி,திருமணத்துக்கு முன் காதல்செய்வதை ஆதரிப்பவன் மனிதனே அல்ல. மாறுபட்டக்கருத்துடைய நண்பர்கள் நான் ஏழுதியபுத்தகத்தை படியுங்கள்.
