அறிவின்_தோற்றம்
-
இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா?
#இசைஞானி #இளையராஜா இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா? அல்லது இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் தவறாக விமர்சிக்கின்றார்களா ?அதாவது பொருளின் தரத்தில் குறை இருக்கா அல்லது தரத்தை உறுதி செய்யும் அளவுகோலில் தவறு இருக்கா என்பதை இந்த ஆய்வில் பார்ப்போம். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின்படி நம்முடைய ஐந்து புலன்களால் மட்டுமே அறிவை பெற முடியும். நாம் ஒரு பொருளை நுட்பமாக பார்க்கும் பொழுது நம்முடைய பார்வையின் பரப்பளவு குறைந்துவிடும், நாம் விரிந்து பார்க்கும் பொழுது நுட்பம் குறைந்துவிடும்…
-
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா !
அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்களிடம் இருந்து நான் பெற்று “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். மரத்திலிருந்து விழும் பல லட்சம் விதைகளில் ஏதோ ஒரு விதை மட்டும் மரமாக வளர்ந்து பல உயிர்களுக்கு பயன்படுவது போல் என்னுடைய எழுத்தை பல…
-
பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 2)
அறிவியல் ஆய்வின்படி தொடர்வினை தத்துவத்திர்க்கும், அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை உண்டு என்ற தத்துவத்திற்கு உட்பட்டு தான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அறிவியல் ஆய்வின்படி நேற்றைய நிகழ்வுகளே இன்றைய நிகழ்வுகளுக்கு காரணம், இன்றைய நிகழ்வுகளே நாளைய நிகழ்வுகளுக்கு காரணம் என்று உறுதியாவதால், எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்ற கருத்தை உள்ளடக்கிய விதி உண்மை என்பது என்னுடைய ஆய்வின் முடிவு. தந்தை பெரியாரும் முற்போக்கு பகுத்தறிவாளர்களும் விதியை பொய்யென்றும், ஆன்மிகவாதிகள் விதியை உண்மை என்றும், படித்த ஆன்மிகவாதிகளும்,…
-
பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 1)
இளைஞர்களை நேர்மையானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஊக்கப்படுத்தும் கட்டுரை இது. 12 வயது வரைக்கும் மாணவர்களால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியாது, எனவே 40 ஆண்டுகளுக்கு முன் பல நீதிக் கதைகளைச் சொல்லி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால் நன்மையே நடக்கும். நேர்மை தவறினால் கேடு தான் விளையும் என்று நம்ப வைத்தார்கள். சிறுவயதிலேயே மாணவர்கள் மனதில் நேர்மை விதைக்கப்பட்டதால் பெரும்பாலானவர்கள் ஒழுக்கமானவரகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருந்தார்கள். காலப்போக்கில் நீதி கதைகளை மாணவர்களுக்கு சொல்ல ஆசிரியர்கள் தவறிவிட்டார்கள்…
-
உலக புத்தக தினம்
புத்தகம் கதையை சொல்லும், கவிதையைசொல்லும், தகவலைச் சொல்லும், மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும், ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது. அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாது. அறிவு என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமல் இந்த உலகம் புத்தக தினம் கொண்டாடுவதால் எந்த பயனும் இல்லை. புத்தகம் யாருக்கு அறிவைக் கொடுக்கும், யாருக்கு தகவலை மட்டும் கொடுக்கும் என்ற புரிதலுக்கு நான் எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “ என்ற…
-
துளிர்
மரத்திலிருந்து பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர் விடுவது போல், பழைய கருத்துக்கள் நம்மிடமிருந்து உதிர்ந்தால் தான் புதிய கருத்துக்கள் நம்மிடம் துளிர்விட முடியும். வள்ளலார் அவர்களுக்கு தான் எழுதிய ஐந்து திருமுறைகளும் தவறு என்று தோன்றியதால் தான் ஆறாவது திருமுறையை எழுதினார், ஆறாவது திருமுறை எழுதியவுடன் இதற்கு முன் எழுதிய ஐந்து திருமுறைகளையும் படிக்காதீர்கள் கொலுத்திவிடுங்கள் என்று சொல்லிவிட்டார், இதுவே வள்ளலார் அறிவு வளர்ச்சிக்கு சான்று. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இறந்த காலத்தில் இருந்து…
-
அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும்
ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்திற்கு இல்லாததால்தான். அனுபவம் இல்லாமல் படிப்பால் தான் பெற்ற தகவலை அறிவாக நினைக்கும் இந்த சமுதாயத்தை அறியாமையில் இருந்து மீட்டெடுக்க, நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதி இருந்தாலும் அந்தத் தகவலை அறிவாக மாற்றி கொள்ளும் அனுபவம் (அறிவு )படித்தவர்களுக்கு…
-
படித்தவன்
தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.
-
ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம்.
புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன் இயல்பான வாழ்க்கையை வாழாமல் துறவு கொண்டார்கள் ! உணர்வுபூர்வமான, இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு, கற்பு போன்ற அறியாமையே ஒரு மனிதனுக்கு தேவைப்படுகின்றது,எனவே உலகில் உள்ள அனைவரும் ஞானம் பெற்று வாழ்க்கையை ஞானத்தால் தொலைக்க வேண்டுமென்று அவசியமில்லை, எனவே நோயை குணப்படுத்த ஊருக்கு ஒரு…
-
மரணிக்கும் அறிவு
ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்று திருவள்ளுவர், புத்தர் போன்ற பல ஆயிரம் மகான்கள் மற்றும் பல ஆயிரம் கோடி மக்கள் வாழ்ந்த இந்த உலகில் வாழத் தெரியாமல் வாழும் இன்றைய சமுதாயமே. முன்னோருக்கும் முன்னோரின் அறிவை நம் முன்னோர்களும், நாமும் பெற்று இருந்தால் உண்மையான ஆன்மீகத்தையும்,…
