அறிவுரை
-
ஒரே இடத்தில் தேங்கி விடாதே
ஒவ்வொரு உணர்வுகளும் தனித்தனி உலகம். ஒரு உணர்வில் வாழும் பொழுது மற்றொரு உணர்வு உலகத்தில் நாம் வாழ முடியாது. ஒரு மனிதன் பல உணர்வு உலகில் மாறி மாறி வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை. அன்பு, பாசம், குடும்பம், உணவு, விளையாட்டு, போட்டி, பணம், படிப்பு,புகழ், பதவி, காமம், நட்பு, என்று பல உணர்வுகள் மனிதனுக்கு இன்பத்தை கொடுத்தாலும், ஒரே ஒரு உணர்வு உலகத்தில் தன் வாழ்க்கையை தொலைத்து விடுவதை நன்மையாக இருந்தால் சாதனையாக பார்க்கின்றார்கள், கெடுதலாக இருந்தால்…
-
ஆள் பாதி, ஆடை பாதி
ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவலைப்படுவது இல்லை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றியும் நான் கவலைப்படுவதில்லை என்றால் அது தவறு இல்லை ஆனால் அதற்கான எதிர் வினையை நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். பார்த்தவுடன் மற்றவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் புரிதல், நம்பிக்கை உங்கள் ஆடையை அடிப்படையாக…
-
வெற்றியும், தோல்வியும்…
வெற்றியும், தோல்வியும் இரண்டு மார்க்கங்கள். எந்த மார்க்கமாக நாம் பயணம் செய்தால் நன்மைகள் நடக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே வாழ்க்கையில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் சமமாக நினைத்து ஆணவம் இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே இன்பமாக வாழ முடியும்.
-
தொழிலாளிக்கு முதலாளி எதிரியா?முன்மாதிரியா?
நமக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவரைப் போலவே இருவரும் நினைப்பதால் தான் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நான் ஆறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து நெய்வேலியில் நம்பர் ஒன் மின் ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்ததால் எனக்கு தொழிலாளியின் கஷ்டங்களும் தெரியும், முதலாளியின் கஷ்டங்களும் தெரியும். எனவே இந்த கட்டுரையை நான் எழுதுவது மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதி இருக்கும்…
-
சர்வதேச புத்தக தினம்
“புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதி 10 ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இந்த புத்தகம் இதுவரை இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, காரணம் இந்த புத்தகத்தில் உள்ள தகவலை அறிவாக பெறுவதற்கு வாசகர்களிடம் அறிவு (அனுபவம்)இல்லை. அறிவு என்பது அனுபவத்தால் பெறுவது மட்டுமே. கண்ணால் பார்த்து படித்து ஒரு தகவலை பெறுவதற்கும், காதால் கேட்டு ஒரு தகவலை பெறுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இரண்டும் ஒன்றுதான். பழங்காலத்தில் குரலை பதிவு செய்யக்கூடிய…
-
தமிழ் புத்தாண்டு தை ஒன்றா? சித்திரை ஒன்றா?
எந்த ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாமல், அரசியல் கலப்பு இல்லாமல்,மத உணர்வு இல்லாமல், மொழிப்பற்று இல்லாமல், அனைத்து உணர்விலிருந்தும் விடுபட்டு அறிவின் ஆளுமையில் அறிவியல் பூர்வமாக நடுநிலையில் இந்த கட்டுரையை நான் எழுதிஇருக்கின்றேன். ஒரு மதத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் அடையாளமாக 365 நாட்களில் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் ஆண்டில் முதல் நாளாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம், சூரியனை பூமி சுற்றிவர எடுத்துக் கொள்ளும் 365 நாட்களில் எந்த ஒரு நாளையும் ஆண்டின் முதல் நாளாக எடுத்துக்…
-
பெரியவர்கள் காலில் விழுவது சரியா?
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா! ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உணர்வின் வெளிப்பாடு. ஒருவர் நமக்கு அடிமையாக இருப்பதன் மூலம் நாம்பெரும் மகிழ்ச்சி உணர்வின் வெளிப்பாடு, உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். மனிதன் அறிவால் உணர்வை ஆளுமை செய்வதால் தான் ! மிருகத்தைவிட அறிவால் உயர்ந்து நிற்கின்றான். உணர்வை அறிவால் ஆளுமை செய்ய…
-
பெற்றோர்களே பிள்ளைகளுக்கும் முதல் குரு
என்னுடைய ஆய்வின்படி பெற்றோர்கள், தான் செய்த தவறை, தவறு என்று ஒத்துக் கொண்டால்தான் அதே தவறை பிள்ளைகள் செய்யமாட்டார்கள். பல குடிகாரர்களின் பிள்ளைகள் குடிகாரர்களாகவும், சில குடிகாரர்களின் பிள்ளைகள் குடிக்காமல் இருப்பதற்கு தந்தையே காரணம். எப்படி வாழ வேண்டும் என்பதையும், எப்படி வாழக் கூடாது என்பதையும் பெற்றோர்களைப் பார்த்தே பிள்ளைகள் தெரிந்து கொள்கிறார்கள். தான் செய்த தவறையும், ஒழுக்கக்கேடான செயலையும் நினைத்து வெட்கப்படும், வருத்தப்படும் பெற்றோரை பார்க்கும் பிள்ளைகள் இந்தத் தவறை நாமும் செய்யக்கூடாது என்ற அறிவை…
