அறிவுரை

  • பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 1)

    இளைஞர்களை நேர்மையானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஊக்கப்படுத்தும் கட்டுரை இது. 12 வயது வரைக்கும் மாணவர்களால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியாது, எனவே 40 ஆண்டுகளுக்கு முன் பல நீதிக் கதைகளைச் சொல்லி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால் நன்மையே நடக்கும். நேர்மை தவறினால் கேடு தான் விளையும் என்று நம்ப வைத்தார்கள். சிறுவயதிலேயே மாணவர்கள் மனதில் நேர்மை விதைக்கப்பட்டதால் பெரும்பாலானவர்கள் ஒழுக்கமானவரகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருந்தார்கள். காலப்போக்கில் நீதி கதைகளை மாணவர்களுக்கு சொல்ல ஆசிரியர்கள் தவறிவிட்டார்கள்…

  • சும்மா இருந்தாலும் அதுவும் புரட்சி தான்

    ஆகஸ்ட் 15, ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள் மட்டுமல்ல இதே நாளில்தான் நாம் இந்தி பேசும் வட இந்தியர்களிடம் மொழி அடிமைகளாக அடிமைப்பட்டு, மொழி அடிமைகள் என்ற புரிதல் இல்லாமல் மூன்று தலைமுறையாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அடிமைகள் நாம்தான். புரட்சி என்பது ஆயுதத்தை கையில் எடுப்பது அல்ல, ஒவ்வொருவர் மனதிலும் நாம் மொழி அடிமைகளாக இருக்கின்றோம் என்ற புரிதல் அரும்பினாலே போதும் அதுதான் புரட்சி. இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம்…

  • சாதி என்பது குடும்பங்களின் குடும்பம்.

    சாதி ஒழிய வேண்டும் என்பது அரசியல் ! உறவுகள் சிதைந்தால் சாதி அழிந்துவிடும் !சாதி அழிந்தால் உறவுகள் சிதைந்து விடும் !குடும்ப உறவை சிதைத்தால் மீண்டும் கற்கால மனிதனாகிவிடுவோம்! சாதிகளுக்கு இடையே நல்லிணக்கம் தேவை, சாதிகளுக்கு இடையே சமத்துவம் தேவை, இவைகளுடன் சாதியும் தேவை. எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துபவன் முட்டாள், சாதிகளுக்கு இடையே சமத்துவத்தை ஏற்படுத்தாமல் சாதி அழிய வேண்டும் என்பவன் அரசியல்வாதி.

  • வேண்டும்! வேண்டும்!! மொழி சுதந்திரம் வேண்டும்!

    ஒரு தனி மனிதரை மையமாக வைத்து பலர் பின் தொடர்வது கிளர்ச்சி, சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ( centrifugal force). வெற்றிடத்தை மையமாக வைத்து கொள்கையின் உந்துதலால் பலர் ஒன்றாக இனைவது புரட்சி, புயல் ஒரு வெற்றிடத்தை மையமாக வைத்து உருவாவது போல் ( tornado force). ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிடத்தை மையமாக வைத்து, தலைமை இல்லாமல் கொள்கையால் இணைந்த போராட்ட இயக்கம் அதனால் தான் புயலைப்போல் அதன் வேலை முடிந்ததும் தானாகவே வலுவிழந்து…

  • மொழி சுதந்திரப் போராட்டம்

    அன்று நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று நடக்கும் மொழி சுதந்திர போராட்டத்திற்கும் வேற்றுமை உண்டு. அன்று இந்தி மொழியை வேண்டாம் என்று தமிழகம் மட்டும் தனிமையாக போராடியதால் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இன்று, இந்தியைப் போல் 22 மாநில மொழிகளுக்கும் சமமான அங்கீகாரம் வேண்டும் என்று அனைத்து மாநிலத்தையும் ஒன்றுதிரட்டி போராடுவதால் நிச்சயம் இந்த முறை நமக்கு மொழி சுதந்திரம் கிடைத்து விடும். அரசியல் சுயநலமில்லாமல் ஒன்றிணைவோம் !போராடுவோம் !!வெற்றி பெறுவோம் !!!

  • திருமண வாழ்த்து

    அறிவற்ற நிலையில் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் ! இதை படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் வாழ்த்துவதாக நினைக்கமாட்டார்கள் சாபம் விடுவதாகதான் நினைப்பார்கள், புரிந்துகொண்டால் மணமக்களை வாழ்த்த இதைவிட சிறந்த வார்த்தை இல்லை என்பது புரியும். அறிவற்ற நிலையில்தான் உணர்வை அனுபவிக்க முடியும். இல்லறத்தில் இன்பமாக வாழ இந்த இரண்டு அறிவும் இருக்கக் கூடாது. ஒன்று, இளமைப்பருவத்தில் இருந்தது போன்று யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயக்கூடிய அறிவு இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டாவது, கற்பு என்ற…

  • நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு

    பிள்ளைகளை பதட்டப்படுத்தாதீர்கள் மாறாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள், தோல்வியை எதிர்கொள்ள தயார் படுத்துங்கள், தோல்வி அடைந்தவன் வாழ முடியாது என்றால் இந்த உலகில் யாரும் உயிராக இருக்க முடியாது. நரியின் கதை படி கைக்கு எட்டாத பழம் “சீ சீ இந்தப் பழம் புளிக்கும் “என்பதை போல் நமக்குக் கிடைக்காதது அனைத்தும் நமக்கு தேவைப்படாதது என்ற சிந்தனையே வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தைக் கொடுக்கும். தோல்வியை எதிர்கொள்வது தான் வாழ்க்கையின் வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு துணையாக இருங்கள்,…

  • ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம்.

    புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன் இயல்பான வாழ்க்கையை வாழாமல் துறவு கொண்டார்கள் ! உணர்வுபூர்வமான, இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு, கற்பு போன்ற அறியாமையே ஒரு மனிதனுக்கு தேவைப்படுகின்றது,எனவே உலகில் உள்ள அனைவரும் ஞானம் பெற்று வாழ்க்கையை ஞானத்தால் தொலைக்க வேண்டுமென்று அவசியமில்லை, எனவே நோயை குணப்படுத்த ஊருக்கு ஒரு…

  • உங்கள் வாக்கு எதற்கு, உணர்வுக்கா? அறிவுக்கா?

    உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உணர்வால் முடிவு செய்தீர்களா அல்லது அறிவால் முடிவு செய்தீர்களா, உணர்வின் மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் நன்மையாக தெரிவதால் சரியாகத் தோன்றும். அறிவின்மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் தவறாக மற்றவர்களுக்கு தெரிந்தாலும் வருங்காலத்தில் அதுவே நன்மையாக இருக்கும். சுதந்திரம் பெற்ற உடனே ஜனநாயகம் மலர்ந்தது, ஜனநாயகத்தால் சமூக நீதி கிடைத்தது, சமூகநீதியால் குலத்தொழில் ஒழிக்கப்பட்டது, குலத்தொழில் ஒழிக்கப்பட்டதால் அனைவரும் சமம் என்ற நீதி அனைவர் மனதிலும் நீங்கா இடம்…

  • உங்களுக்கு வாக்குரிமை உள்ளதா ?

    நம் நாட்டில் வாக்குரிமை உள்ளவர்கள் 20 % சதவிகிதத்தினர் மட்டும்தான், மீதமுள்ள 80 %சதவிகிதத்தினர் வாக்குரிமை இருந்தும், இல்லாதவர்களே. ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கின்றது என்று சொல்கின்றார்களே !அதன் உள் பொருள் அந்த வங்கியில் உள்ளவர்கள் அவர்களுடைய வாக்குரிமையை அடகு வைத்துள்ளார்கள் என்று பொருள்.அவர்களின் கட்சிகள் தொடர்ந்து தவறுகளை செய்தாலும், இவர்களும் தொடர்ந்து அதற்கேதான் அவர்களின் வாக்கை போடுவார்கள் என்பது உறுதி. வாக்குரிமையை இழந்து நிற்கும் கட்சி உறுப்பினர்களே, பொறுப்பாளர்களே, சிந்தியுங்கள் !உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்…