தன்னிலை_வளர்ச்சி
-
சீ..சீ..இந்த பழம் புளிக்கும்
வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிருக்கும் அறிவு நமக்கு இன்பத்தை கொடுத்தால் அது நல்லறிவு,துன்பத்தைக் கொடுத்தால் அதற்கு அறிவு சூனியம் என்று பொருள். பலர் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அறிவு சூனியத்தால் துன்பத்தில் வாழ்கின்றார்கள் எது நல்லறிவு,எது அறிவு சூனியம் என்பதை அறிந்து நல்லறிவை மட்டும்…
-
அறிவை அளக்கக்கூடிய அளவுகோல்…
அறிவை அளக்கக்கூடிய அளவுகோல் (scale) என்னிடம் உள்ளது, அதை வைத்து நமக்கு இப்போது எத்தனை அறிவு இருக்கு என்று சுயபரிசோதனையும் செய்து கொள்ளலாம் மற்றவர்களுக்கு எத்தனை அறிவு இருக்கு என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் நாம் அவர்களிடம் பழகலாம். அறிவின் அளவுகோல் தேவைப்படுகின்றவர்கள் விருப்பத்தை தெரிவித்தால் கொடுக்கின்றேன்.
-
பெரியவர்கள் காலில் விழுவது சரியா?
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா! ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உணர்வின் வெளிப்பாடு. ஒருவர் நமக்கு அடிமையாக இருப்பதன் மூலம் நாம்பெரும் மகிழ்ச்சி உணர்வின் வெளிப்பாடு, உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். மனிதன் அறிவால் உணர்வை ஆளுமை செய்வதால் தான் ! மிருகத்தைவிட அறிவால் உயர்ந்து நிற்கின்றான். உணர்வை அறிவால் ஆளுமை செய்ய…
-
பெற்றோர்களே பிள்ளைகளுக்கும் முதல் குரு
என்னுடைய ஆய்வின்படி பெற்றோர்கள், தான் செய்த தவறை, தவறு என்று ஒத்துக் கொண்டால்தான் அதே தவறை பிள்ளைகள் செய்யமாட்டார்கள். பல குடிகாரர்களின் பிள்ளைகள் குடிகாரர்களாகவும், சில குடிகாரர்களின் பிள்ளைகள் குடிக்காமல் இருப்பதற்கு தந்தையே காரணம். எப்படி வாழ வேண்டும் என்பதையும், எப்படி வாழக் கூடாது என்பதையும் பெற்றோர்களைப் பார்த்தே பிள்ளைகள் தெரிந்து கொள்கிறார்கள். தான் செய்த தவறையும், ஒழுக்கக்கேடான செயலையும் நினைத்து வெட்கப்படும், வருத்தப்படும் பெற்றோரை பார்க்கும் பிள்ளைகள் இந்தத் தவறை நாமும் செய்யக்கூடாது என்ற அறிவை…
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு
பிள்ளைகளை பதட்டப்படுத்தாதீர்கள் மாறாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள், தோல்வியை எதிர்கொள்ள தயார் படுத்துங்கள், தோல்வி அடைந்தவன் வாழ முடியாது என்றால் இந்த உலகில் யாரும் உயிராக இருக்க முடியாது. நரியின் கதை படி கைக்கு எட்டாத பழம் “சீ சீ இந்தப் பழம் புளிக்கும் “என்பதை போல் நமக்குக் கிடைக்காதது அனைத்தும் நமக்கு தேவைப்படாதது என்ற சிந்தனையே வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தைக் கொடுக்கும். தோல்வியை எதிர்கொள்வது தான் வாழ்க்கையின் வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு துணையாக இருங்கள்,…
-
நம்மை செதுக்கும் சிற்பிகள்
நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள்.வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவதும், நம்அறிவாலும், உணர்வாலும் நாம் தேர்வு செய்யும் நண்பர்களால்தான்.
-
யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன?
என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்கோ அவர்கள் குறிப்பிட்டு நல்லவர் என்பதற்கு என்ன அளவுகோல் வைத்து இருக்கின்றீர்கள், அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவனும், அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுபவனும், கொலைகாரனும், கொள்ளைக்காரனும் தன்னுடைய செயலை சரி என்று நினைப்பதால் தான் செய்கின்றார்கள், அதனால் அனைவரும் தன்னை நல்லவராகவே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உங்களுடைய…
-
கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள் இறந்த பிறகும் உலகத்திற்கு கற்பித்துக் கொண்டேஇருக்கின்றார்கள்,காந்தி, காமராசர், கண்ணகியை போல்.
-
ரகசியம் நம்மை அன்னியப்படுத்திவிடும்
தேவைப்படும் பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டு தேவைப்படாத பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் வீடு சுத்தமாக இருப்பது போல், நாம் ரகசியம் என்று ஒரு சிலதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் ! மனசு தூய்மையாக இருக்கும். இருந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இடம். இப்போது வாழ்கின்ற இளைஞர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள், எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று. ஏன் என்று கேட்டால் அனைவரும் அப்படித்தான் இருக்கின்றார்கள்…
