தன்னிலை_வளர்ச்சி

  • மன்னிப்பு

    தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தன்னை உயர்த்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு. தான் செய்த தவற்றிர்க்கும், குற்றத்திற்கும், பாவத்திற்கு மான விடுதலையே பாவமன்னிப்பு. தன்னுடைய தவற்றை உளமார உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்பது நம்பிக்கை. இது உண்மைதான் தவறு செய்யாதவன் மனிதனாக…

  • அன்பே அழகு

    குழந்தைகளை பார்த்தால் சிலர் குழந்தைகளாகவேமாறி அவர்களிடம் விளையாடுவார்கள், இதனால் குழந்தைகள் அவர்களிடம் மிகவும் அன்பாக இருக்கும்.அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன். குழந்தைகளுடைய கள்ளமில்லா முகம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே நான் குழந்தைகளை வேற்றுமை பாராமல் கட்டித் தழுவிக்கொள்வேன், பதிலுக்கு குழந்தைகளும் என் மீது அன்பு கொண்டு முகத்தோடு முகம் வைத்து அணைத்துக் கொள்ளும் போது என்னையே நான் மறந்துவிடுவேன், குழந்தைகள் தெய்வத்துக்கு மேலானவர்கள், அவர்களின் முகத்தை பார்த்தால் துன்பம் அனைத்தும் பறந்தோடிவிடும். குழந்தைகளிடம் நாம்…

  • போட்டி

    பிறப்பிலும், வளர்ப்பிலும், வாழ்விலும், நான் மற்றவர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவன் என்று எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவன் யாருடனும் போட்டி போட மாட்டான். போராட்டம் நம் தேவைகளை பெற்றுக் கொடுக்கும்!போட்டி நம் நிம்மதியை கெடுக்கும் !போட்டியும், பொறாமையும், ஆறாவது அறிவால் மனிதன் பெற்ற சாபம். சாலையில் சம்மந்தமே இல்லாதவர்களுடன் போட்டி போட்டு விபத்தை ஏற்படுத்துவதுபோல், வாழ்க்கையில் சம்பந்தமில்லாமல் பலருடன் போட்டிபோட்டு பலர் வாழ்க்கையை போட்டியில் தொலைத்துவிடுகிறார்கள். போராடுவோம் !வெற்றி பெறுவோம்!போட்டியை தவிர்ப்போம்!

  • நமக்கு பிடித்ததை நாம் அடைவது தான் வெற்றி

    வெற்றிக்கு முதல் படி முயற்சி !முயற்சிக்கு முதல் படி நம்பிக்கை !நம்பிக்கைக்கு முதல் படி (ஆசை )தேவைகள் !தேவைகளுக்கு முதல் படி உணர்வு! வெற்றி என்பது சமுதாயத்துக்கு பிடித்ததை நாம் அடைவதில் இல்லை, நமக்கு பிடித்ததை நாம் அடைவதில் தான் உள்ளது.

  • உணர்வின் கடிவாளம் அறிவு

    ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்ற வாழ்க்கையில்தான் உள்ளது. ஒருவனுடைய அறிவின் வெளிப்பாடு அவன் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் தான் வெளிப்படுகின்றது. இளைஞர்களை பார்த்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்வது மிக எளியது, ஆனால் இதுவரை யாரும் அறிவால் உணர்வுகளை எப்படி ஆளுமை செய்து ஒழுக்கமாக வாழ்வது…

  • யார் மனிதன்?

    தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிருகத்தை விட கொடியவன். சுற்றம் பாதிக்கும் வகையில் மது அருந்துவது, பொது இடத்தில் புகை பிடிப்பது, பொது இடத்தை அசுத்தம் செய்வது, பெற்றோர் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்துகொள்வது, பாலியல் துன்புறுத்தல் செய்தல், அனைத்தும் மிருக செயல்தான். கொடிய மிருகத்தை விடகொடியவன், மிருகம் கூட…

  • என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும்

    ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விட்டதால், தன்னம்பிக்கையை இழந்து மிகவும் சோகத்தில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த அப்பாவின் நண்பர் எனக்கு ஆறுதலாக நீ பெரிய அறிவாளி, உன்னிடம் திறமைகள் அதிகம் இருக்கு,“வெற்றி பெறுபவர்கள் அனைவரும் அறிவாளியும் இல்லை,…

  • சாதனையும், சேவையும்

    உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை போல் நான் இருப்பது என் இயல்பு, இது எப்படி சாதனையாக முடியும்.. உசேன் போல்ட் பிறப்பாலும் வளர்ப்பாலும் வேகமாக ஓடக்கூடிய திறனை பெற்று இருக்கின்றார் என்பது அவருடைய இயல்பு இதை சாதனை என்று எப்படி சொல்ல முடியும்.…

  • அவமானம்

    “அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான்———————-தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர்களால் ஏற்படுவது அல்ல,நீயாகவே ஏற்படுத்திக் கொள்வது. எந்த இடத்தில் உனக்கு மரியாதைத் தேவை என்று என்னுகின்றாயோ அந்த இடத்துக்குரிய தகுதியை நீ வளர்த்துக் கொண்டால் மரியாதை தானாக உனக்கு கிடைக்கும், எல்லா இடத்திலும் மரியாதையை பெற்றவர் இந்த உலகில் யாரும் இல்லை. தகுதிக்கு அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பவன் வாழ்நாள் முழுவதும் அவமானப்பட வேண்டியது…