மொழி_உரிமை
-
இந்தி மொழியை கற்கலாமா ?
மத்திய அரசின் நிர்ப்பந்தம் இல்லாமல் விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழியை கற்கலாமா ? அறிவை பற்றி நான் செய்த ஆய்வில் கிடைத்த விடை —நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோம், எதை உணர்கின்றோமோ, அது நம்மை, நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளஆரம்பித்துவிடும் என்பதே,இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. நாம் பெறுகின்ற அறிவு அனைத்தும் நமக்கு நன்மையை செய்யாது. நாம் பெற்ற பல அழிவுகள் நமக்கு சூனியம்மாகவே அமைந்துவிடுகின்றன.அதனடிப்படையில் இந்தியை தாய்மொழியாக இல்லாதவர்கள் இந்தியை விரும்பி கற்றுக்கொண்டால் அது…
-
வாழ்க தமிழ் ! சரியான முழக்கமா ?
தமிழ் வாழ்க என்று சொல்லும் அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இதுவரை அதற்கான முயற்சியை செய்து இருக்கின்றார்களா என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். நம்முடைய இலக்கு தமிழ் மொழியும், இந்தி மொழியைப்போல் தேசிய அலுவல் மொழிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான். இந்த அங்கீகாரம் நம் மொழிக்கு கிடைத்தால் மட்டுமே நம் மொழி நமக்கு பயனுள்ள மொழியாக இருக்கும். தற்போதுள்ள மொழிக் கொள்கையின் படி, இந்தியைத் தவிர அனைத்து மாநில மொழிகளும் பயனில்லாத மொழிகள்…
-
I am anti-Hindi fanatic
இந்தியாவில் பல மாநில மொழிகள் இருக்க, இந்தியை மட்டும் தேசிய அலுவல் மொழியாக வட இந்தியர்கள் அறிவித்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது. இது மற்ற மாநில மொழிகளுக்கும்,மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை. எதிரியே தீர்மானிக்கிறான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று, சாதியாலும், மதத்தாலும், மக்களை பிரித்து அவர்களை anti indian என்று சொல்லி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை கெடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி அரசு இன்று மொழியால் மாநிலங்களை பிரித்து, தேச ஒற்றுமையை…
-
மீண்டும் ஒரு கோமாளி செயல்
அன்னநடையை கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட வாத்தைப்போல், அன்ன நடையையும் கற்றுக்கொள்ளமுடியாமல், சொந்த நடையையும் மறந்து தத்தி தத்தி வாத்து நடப்பது போல் அனைத்து மாநில மக்களும் தங்கள் தாய் மொழியையும் இழந்து புது மொழியையும் கற்றுக் கொள்ள முடியாமல், எந்த மொழியையும் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாமல், தவிக்கின்ற நிலைதான் வரும். பலமொழிகளை கற்றிருந்தாலும் தாய்மொழியாலேயே சிந்திக்கின்றனர் என்றும், பல மொழிகளைக் கற்கும் மாணவர்கள், மொழி ஆளுமைக்கே கவனம் முழுவதையும் செலுத்துவதால் சிந்திக்கும் திறன் (creativity )குறைக்கின்றது என்று…
-
தாய்மொழி நம் பிறப்புரிமை
இந்தியா பல நாடுகளின் கூட்டமைப்பு,ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தாய்மொழிகள் உள்ளன, அதனால் தான் இந்தியாவுக்கு என்று எந்த மொழியும் தேசிய மொழியாக இல்லை. இந்தி தேசிய மொழிஅல்ல.இந்தியா ஒரு கூட்டமைப்பு நாடு என்பதால், எந்த ஒரு மாநில மொழியும், கலாச்சாரமும், மற்றொரு மாநிலத்தி ன்மீது திணிக்கக் கூடாது என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆன அடிப்படை உரிமை.மீறினால் ஐநா தலையிடுவதற்கு உரிமை உள்ளது இதைப் பொருட்படுத்தாத…
-
NLC நீர்பந்தல்
மொழி உரிமை விழ்ப்புணர்வு தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனம் தமிழக மக்களுக்காக நீர்பந்தல் அமைத்துள்ளது அந்த பந்தலுக்கான பெயரை தமிழில் வைக்காமல் இந்தி வார்த்தையில் DHARA என்று பெயர் வைத்துள்ளது. தமிழக மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் வட நாட்டு அதிகாரியின் இந்த செயலை நாம் அனைவரும் கண்டிப்போம். இந்த போராட்டம் இந்திக்கு எதிரான போராட்டம் அல்ல, தென் இந்திய மாநில மக்கள் அனைவருக்குமான மாநில மொழி உரிமை போராட்டம். இதில் தமிழ், மலையாளம், கன்னடம்,…
-
தாய் மொழி சுதந்திரம்
முட்டை, கோழியிலிருந்து வந்ததா? அல்லது கோழி,முட்டையிலிருந்து வந்ததா? என்ற கேள்வியும், ஹிந்தி படிப்பதால் நல்லதா?கெட்டதா? என்ற கேள்வியும்,அறிவாளிகள் என்று தன்னை நினைத்து கொள்பவர்கள், மற்றவர்களை முட்டாளாக்க கேட்கும் கேள்வியாகவே இதுவரை உள்ளது… முட்டை எங்கிருந்து வந்தது என்று கேட்டல்தான், பரினாம வளர்ச்சியால் முட்டை வந்தது என்று சரியான பதிலை சொல்லலாம், இரண்டில் ஒன்றை தான் சொல்ல வேண்டும் என்று தவறான கேள்வியை கேட்டால் சரியான பதில் எப்படி கிடைக்கும்?… அதுபோல் இந்தியாவில் 22 மாநில மொழிகள் இருக்கும்…
-
மும்மொழி கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ?
இது அரசியல் பதிவு அல்ல, தமிழர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மக்களும் தன் மொழி உரிமையை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும், ஒரு சில மாநில கட்சிகள் பிஜேபி கட்சியுடன் இணைந்து முன்மொழி கொள்கையை ஆதரிப்பது அரசியல் சுயநலத்துக்காக தான்.அவர்களுக்கு தமிழர்கள் மீதும், மொழியின் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் அரசியல் கைக்கூலிகள். பதவி அதிகாரத்தைப் பெற மக்களின் மொழி உணர்வை கருணாநிதி பயன்படுத்தியதை போல் ஸ்டாலின் செய்யாமல், உண்மையிலேயே தமிழுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் மொழி…
