மொழி_உரிமை

  • வேண்டும்! வேண்டும்!! மொழி சுதந்திரம் வேண்டும்!

    ஒரு தனி மனிதரை மையமாக வைத்து பலர் பின் தொடர்வது கிளர்ச்சி, சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ( centrifugal force). வெற்றிடத்தை மையமாக வைத்து கொள்கையின் உந்துதலால் பலர் ஒன்றாக இனைவது புரட்சி, புயல் ஒரு வெற்றிடத்தை மையமாக வைத்து உருவாவது போல் ( tornado force). ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிடத்தை மையமாக வைத்து, தலைமை இல்லாமல் கொள்கையால் இணைந்த போராட்ட இயக்கம் அதனால் தான் புயலைப்போல் அதன் வேலை முடிந்ததும் தானாகவே வலுவிழந்து…

  • மொழி சுதந்திரப் போராட்டம்

    அன்று நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று நடக்கும் மொழி சுதந்திர போராட்டத்திற்கும் வேற்றுமை உண்டு. அன்று இந்தி மொழியை வேண்டாம் என்று தமிழகம் மட்டும் தனிமையாக போராடியதால் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இன்று, இந்தியைப் போல் 22 மாநில மொழிகளுக்கும் சமமான அங்கீகாரம் வேண்டும் என்று அனைத்து மாநிலத்தையும் ஒன்றுதிரட்டி போராடுவதால் நிச்சயம் இந்த முறை நமக்கு மொழி சுதந்திரம் கிடைத்து விடும். அரசியல் சுயநலமில்லாமல் ஒன்றிணைவோம் !போராடுவோம் !!வெற்றி பெறுவோம் !!!

  • வாழ்க புரட்சிக் கவி பாரதியின் புரட்சி

    “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பதில்லையே !!“ என்று வீர முழக்கத்தை நமக்கு அறிவாக கொடுத்துச் சென்ற புரட்சிக்கவி பாரதி நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் இன்றளவும் அவருடைய புரட்சி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாலேயே! பாரதி கவிதை மட்டும் எழுதி இருந்தால் அவர் மறைந்தபொழுதிலேயே மக்கள் பாரதியை மறந்திருப்பார்கள், ஆனால் பாரதி பெண் விடுதலைக்காகவும், சாதி சமத்துவத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் களத்தில் இறங்கி சமரசமில்லாமல் புரட்சி செய்ததாலேயே…

  • ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது?

    ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது? ஆடு மீது உள்ள அக்கறையால் அல்ல !அதை கொன்று சாப்பிடுவதற்காகவே என்பதை போல், தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக இல்லாதவர்கள் தமிழர்களைப் போல் தமிழில் பேசினாலும் அவர்களில் பலர் தமிழை அழிப்பதற்காகவே இந்தி மொழிக்கு ஆதரவாக பேசுகின்றார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒரு மொழி தாய் மொழியாக இருப்பதால் அனைத்து மாநில மக்களும் மற்ற மாநில மக்களுடன்…

  • மும்மொழி கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்?

    1) மும்மொழி கல்விக் கொள்கை மாநில மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும். இருமொழிக்கொள்கை மாநில உரிமை, இதை மீறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் கல்வி கொள்கை இருக்க வேண்டும், மீறினால் உச்ச நீதிமன்றம், அல்லது ஐ நா தலையிடுவதற்கும், மத்திய அரசை எச்சரிப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே மும்மொழி கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 2). உலக ஆய்வின் முடிவு தாய்மொழியால் படிக்கும் மாணவர்களால் மட்டுமே அறிவிலும், சிந்தனைத் திறனிலும் சிறந்து…

  • நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும்

    ஒரு சமுதாயத்தின் அறிவு தான் அந்த சமுதாயத்தின் நீதியாக இருக்க முடியும். நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும். பெரும்பான்மை மக்களிடம் அறிவு மாற்றமில்லாமல் நீதி மாற்றம் ஏற்படாது. ஒரு நடிகையின் தற்கொலைக்கான காரணத்தை தெரிந்துகொள்ள மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கும் ஆர்வம் மாநில பொருளாதாரம், கல்வி, மொழி ஆகியவற்றின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என்பதில் இல்லை. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கடமை ஊடகங்களுக்கு தான் அதிகம் உள்ளது ஆனால் இங்கு ஊடகங்களால் அனைத்தும்…

  • இந்தி தெரியாது போடா…

    ”இந்தி தெரியாது போடா “ “நான் தமிழ் பேசும் இந்தியன் “ என்ற வாசகத்தின் பொருள் இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் மொழி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற இருமொழிக் கொள்கையை வலிவுறுத்துகின்ற மொழிச் சுதந்திரப் போராட்டமே ஆகும். இதைப் புரிந்து கொள்ளாமல் போராடுபவர்களுக்கு இந்தி தெரிந்திருந்தால் அவர்கள் தாய் மொழிக்காக போராட தகுதி இல்லாதவர்கள் என்று கேலி செய்வது அறியாமையின் வெளிப்பாடே மற்றும் தாய்மொழி உணர்வை அரசியலுக்காக விற்கும் செயலே இது.

  • மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை

    மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை, இவற்றில் ஒன்று இந்த மந்தையை வழிநடத்துவது தான் ஜனநாயகம். மந்தையின் தலைவன் (அரசியல்வாதி )ஆட்டு மந்தையின் விருப்பப்படி ஆட்சி செய்தால் தான் அவன் தலைவனாக இருக்க முடியும். எது நன்மை, எது தீமை என்று அறிந்து செயல்பட்டால் அவன் பதவி பறிபோய்விடும், எனவே ஜனநாயக நாட்டில் ஆள்பவன் அறிவாளியாக இருந்து பயனில்லை, மக்களின் விருப்பத்தை செயல்படுத்துபவனாக இருந்தாலே போதும். மக்களையும், அரசியல் தலைவர்களையும் நன்மை, தீமை அறிந்து வழிநடத்த அரசியல் சார்பில்லாத சமூக…

  • இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும்

    நம் கல்விமுறை அறிவை கொடுப்பதற்காக மட்டும் இருந்தால் இந்தி மட்டுமல்ல அனைத்து மாநில மொழியையும் படிக்கலாம் தவறு இல்லை, ஆனால் நம் கல்விமுறை ஒருவனுடைய அறிவுத்திறனையும் மதிப்பிடுவதால் இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும். நம் தாய்மொழியின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கும் இசை அமைப்பாளர் யுவனை கேலி செய்யும் தமிழர்கள் தன் கையாலேயே தன் கண்ணை குத்திக்கொள்பவர்கள். தன்னுடைய குருதி என்று அறியாமல் தன் குருதியை தானே சுவைத்து அருந்தும் அரசியல் கைக்கூலி…

  • மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்

    நம்பிக்கையே வாழ்க்கை, நம்பிக்கை இல்லை என்றால் போராட்டம் இல்லை, போராட்டம் இல்லை என்றால் வெற்றி இல்லை, வெற்றி இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை இந்த நாட்டை ஆள்பவர்களால் தான் மாற்ற முடியும் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு தனி மனிதனால் எப்படி முடியும் என்று நான் நினைத்து இருந்தால், “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்” என்ற புத்தகத்தை எழுதி இருக்க மாட்டேன், முடியும் என்ற நம்பிக்கையே என்னை எழுத வைத்தது எழுதிய…