தேர்தல்_ஜனநாயகம்

  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் ஆளுமைமிக்க முதல்வராக ஸ்டாலின் வெற்றி வாகை சூடி இருப்பதற்கு வாழ்த்துக்கள். உழைப்பும், நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே சான்று. ஜெயலலிதா அவர்கள் இறந்த உடனேயே குறுக்கு வழியில் ஸ்டாலின் முயற்சி செய்திருந்தால் நான்கு ஆண்டுகள் முதல்வர் பதவியை அனுபவித்திருக்கலாம், ஆனால் அவர் அதற்கு ஆசைப்படாமல் நேர்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக தான் பதவியேற்பேன் என்று சொன்னது அவருடைய நேர்மைக்குச்…

  • 100 சதவிகித வாக்குப்பதிவு !

    அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்வது ஜனநாயக விழிப்புணர்வா !அல்லது வாக்காளர்களை நிர்பந்திக்கும் செய்யலா! சரியான பதிலை தேர்வுசெய்யும் தேர்வு முறையில் தவறான பதிலை தேர்வு செய்தால் மதிப்பெண் குறைந்து விடும் என்பதை போல் அரசியல் பற்றிய தெளிவு இல்லாமல் ஜனநாயகத்தை பற்றிய விழிப்புணர்வும் இல்லாதவர்களை வாக்களிக்க வேண்டுமென்று நிர்ப்பந்தித்தால், அரசியல் தெரியாமல் இராமர் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற அறியாமையில் வாழ்பவர்கள் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிப்பதால்…

  • உங்கள் வாக்கு எதற்கு, உணர்வுக்கா? அறிவுக்கா?

    உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உணர்வால் முடிவு செய்தீர்களா அல்லது அறிவால் முடிவு செய்தீர்களா, உணர்வின் மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் நன்மையாக தெரிவதால் சரியாகத் தோன்றும். அறிவின்மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் தவறாக மற்றவர்களுக்கு தெரிந்தாலும் வருங்காலத்தில் அதுவே நன்மையாக இருக்கும். சுதந்திரம் பெற்ற உடனே ஜனநாயகம் மலர்ந்தது, ஜனநாயகத்தால் சமூக நீதி கிடைத்தது, சமூகநீதியால் குலத்தொழில் ஒழிக்கப்பட்டது, குலத்தொழில் ஒழிக்கப்பட்டதால் அனைவரும் சமம் என்ற நீதி அனைவர் மனதிலும் நீங்கா இடம்…

  • உங்களுக்கு வாக்குரிமை உள்ளதா ?

    நம் நாட்டில் வாக்குரிமை உள்ளவர்கள் 20 % சதவிகிதத்தினர் மட்டும்தான், மீதமுள்ள 80 %சதவிகிதத்தினர் வாக்குரிமை இருந்தும், இல்லாதவர்களே. ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கின்றது என்று சொல்கின்றார்களே !அதன் உள் பொருள் அந்த வங்கியில் உள்ளவர்கள் அவர்களுடைய வாக்குரிமையை அடகு வைத்துள்ளார்கள் என்று பொருள்.அவர்களின் கட்சிகள் தொடர்ந்து தவறுகளை செய்தாலும், இவர்களும் தொடர்ந்து அதற்கேதான் அவர்களின் வாக்கை போடுவார்கள் என்பது உறுதி. வாக்குரிமையை இழந்து நிற்கும் கட்சி உறுப்பினர்களே, பொறுப்பாளர்களே, சிந்தியுங்கள் !உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்…

  • எது ஜனநாயகம்?

    மக்களுக்கு அறிவுரை சொல்லும் ஆட்சியாளர்களும், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும், ஜனநாயகத்தை மதிக்கிறார்களா என்று முதலில் பார்ப்போம், அதன் பிறகு மக்களிடம் தனிமனித ஜனநாயக கடமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும். 1)மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, MPக்கள் ஜனநாயகத்துக்கு எதிராக இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியது ஜனநாயக படுகொலை, இந்த ஜனநாயக கொடுமையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லாத ஊடகங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று மக்களுக்கு அறிவுரை கூற தகுதியில்லாத ஊடகங்கள். 2)குற்றம் செய்த…

  • நிர்பந்திக்காதே!

    உங்கள் வாக்கு யாருக்கு என்று, நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் வாக்களிக்கப் போகும் கட்சியின் பெயரை சொன்னேன். அதை கேட்ட நண்பர் நானும் அதற்கே போடட்டுமா என்று கேட்டார். நான் அதற்கு வேண்டாம் என்றேன்.நண்பருக்கு புரியவில்லை, நான் சொன்னேன், நாம் எடுத்த முடிவு நமக்கு சரியானதாக இருக்கலாம் அது மற்றவர்களுக்கும் சரியானதாக தான் இருக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதற்கு உங்களுடைய வாக்கை போடுங்கள்…

  • அரசியல் கைக்கூலிகள்

    அரசியலுக்காக சாதியாலும்,மதத்தாலும் மக்களை ஒன்று திரட்டும் ஒவ்வொருவனும் சமுதாய நல்லிணக்கத்திற்கு எதிரானவன்.பிழைக்க வழி இல்லாத அரசியல் கைக்கூலிகள், தன் பிழைப்புக்காக புதியதாக யார் கட்சி ஆரம்பித்தாலும் அங்கு ஓடி இடம் பிடிப்பது இயல்பே.

  • தேர்தல் முறை மாறவேண்டும்

    தேர்தல் முறை மாறவேண்டும்!! இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 20% வாக்கை பெற்று மொத்த வாக்கில் அதிகம் பெற்ற கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று சட்டம் இயற்றப்பட்டால் தான், ஒவ்வொரு மாநில கட்சிகளின் ஆதரவும் மத்திய அரசுக்கு தேவைப்படும், அப்போது வட இந்தியர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என்ற நிலை மாறி தென் மாநிலத்தவரும் இந்தியர் தான் என்ற நிலை உருவாகும். ஓவ்வொரு மாநில மொழிக்கும் தேசிய மொழி அங்கீகாரம் கிடைக்கும்.அனைத்து…

  • மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை

    மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை, இவற்றில் ஒன்று இந்த மந்தையை வழிநடத்துவது தான் ஜனநாயகம். மந்தையின் தலைவன் (அரசியல்வாதி )ஆட்டு மந்தையின் விருப்பப்படி ஆட்சி செய்தால் தான் அவன் தலைவனாக இருக்க முடியும். எது நன்மை, எது தீமை என்று அறிந்து செயல்பட்டால் அவன் பதவி பறிபோய்விடும், எனவே ஜனநாயக நாட்டில் ஆள்பவன் அறிவாளியாக இருந்து பயனில்லை, மக்களின் விருப்பத்தை செயல்படுத்துபவனாக இருந்தாலே போதும். மக்களையும், அரசியல் தலைவர்களையும் நன்மை, தீமை அறிந்து வழிநடத்த அரசியல் சார்பில்லாத சமூக…

  • வெற்றிடம்

    புத்தர், காந்தி, பெரியார், போன்ற பல மாமனிதர்களின் வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்து பதவி சுகத்தை அனுபவித்த அரசியல் தலைவர் மறைந்த பிறகு, அந்த இடத்தை நிரப்ப துடிக்கும் பதவி வெறியர்களால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும். வெற்றிடத்தை நிரப்ப நினைப்பவர்கள் நிச்சயம் அவர்களை போல் தான் இவர்களும் இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களைப் போல் தான் இருப்பார்கள்.மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால்,…