அரசியல்_பிரிவினை

  • மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை

    மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை, இவற்றில் ஒன்று இந்த மந்தையை வழிநடத்துவது தான் ஜனநாயகம். மந்தையின் தலைவன் (அரசியல்வாதி )ஆட்டு மந்தையின் விருப்பப்படி ஆட்சி செய்தால் தான் அவன் தலைவனாக இருக்க முடியும். எது நன்மை, எது தீமை என்று அறிந்து செயல்பட்டால் அவன் பதவி பறிபோய்விடும், எனவே ஜனநாயக நாட்டில் ஆள்பவன் அறிவாளியாக இருந்து பயனில்லை, மக்களின் விருப்பத்தை செயல்படுத்துபவனாக இருந்தாலே போதும். மக்களையும், அரசியல் தலைவர்களையும் நன்மை, தீமை அறிந்து வழிநடத்த அரசியல் சார்பில்லாத சமூக…

  • வெறுப்பு கலவரத்தின் பிறப்பிடம்

    கலவரங்களை மக்கள் செய்தாலும் அதை உருவாக்குபவர்கள் ஆட்சி செய்பவர்களும், ஆட்சிக்கு வரநினைப்பவர்களும்தான். கலவரம் மனித சமுதாயத்திற்கு புதியது அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதவி வெறி பிடித்தவர்கள் மக்களைப் பிரித்தாளவேண்டும் என்பதற்காகவே சாதி, மதம், மொழி, இனம், பொருளாதாரம் ஆகியவற்றால் மக்களிடையே வேற்றுமை வெறுப்பை ஏற்படுத்தி கலவரங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்பது ஒருவித குறுக்குவழி, இந்த குறுக்கு வழியை பிஜேபி கட்சி பயன்படுத்தி பிரிவினையின் மூலம் கலவரங்களை ஏற்படுத்தி தான் ஆட்சிக்கு வந்தது. பிஜேபி…

  • அரசியல் விழிப்புணர்வு

    யார் நாட்டை ஆண்டால் எனக்கென்ன ? இன்று நான் உழைத்தால்தான் சாப்பாடு என்று அலுப்போடு சொல்லும் அடிதட்டு உழைப்பாளி முதல், அரசியலை முழுமையாக கரைத்து குடித்து விட்டு இந்த நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் வரை, அனைவருக்குமான விழிப்புணர்வு கட்டுரை இது. நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காக இந்த கட்டுரையை நான் எழுத வேண்டியது என்னுடைய கடமையாக எண்ணி எழுதி உள்ளேன். எனவே வாசகர்கள் படித்ததும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், காரணம் நாம் நல்லவராக இருப்பதை காட்டிலும்…

  • நாட்டுப்பற்று

    அண்டை நாட்டுடன் போரிட்டால் நாட்டுப்பற்று ஏற்படும்! மாற்று மதத்தினரிடம் மத தீவிரவாதத்தை தூண்டினால் மத ஒற்றுமை ஏற்படும்! மாற்று சாதியினரிடம் சாதிவெறியை தூண்டினால் சாதி ஒற்றுமை ஏற்படும்! இது மனிதனின் இயல்பு. இந்த மூன்றையும் பயன்படுத்தி தான் பி ஜே பி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. இது சிறிது காலத்திற்கு இன்பமாக இருக்கும் இதன் தொடர்ச்சி, தொடர்வினை, ஒட்டுமொத்த வட இந்தியாவையே அழித்துவிடும் என்பது விதி.வினையை விதைத்தவன் வினை யையே அறுவடை செய்வான். தென்னிந்தியாவை சேர்ந்த…

  • வருமுன் காப்போம்

    பெரும்பான்மையினர் நாட்டை ஆள்வது ஜனநாயகம் அல்ல.பெரும்பாலானவர்கள் நாட்டை ஆள்வதுதான் உன்மையான ஜனநாயகம். பி ஜே பி யின் பிரிவினை அரசியல் ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும் போதுதான் தீவிரவாத சிந்தனை தலைதூக்கும் என்பது உலக வரலாறு. தீவிரவாதத்தின் முன்பு ஜனநாயகம் தோற்கும் போது அனைவரும் போர்களத்தில் சாக வேண்டியது தான். போர்க்களத்தில் ஜனநாயகம் பேச முடியாது, எனவே காலம் தாழ்த்தாமல் அமைதியான நம் ஜனநாயக நாடு தீவிரவாத நாடாக மாறுவதற்கு முன், பி ஜே…

  • வேறுபாடுகள்

    முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அழிந்துவிடும். ஆனால் மக்களிடம் உள்ள வேற்றுமை உணர்வு அழியாது.அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, மதக்குருக்கலாக இருந்தாலும் சரி. அனைவரும் சாதி வேறுபாடு ஒழிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே புதிய வேறுபாட்டை ஆதரிக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் மற்றவர் இடம் இருந்து வேறுபட்டு…